Just In
- 27 min ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- 55 min ago நீங்கள் குழந்தைகளுக்கு செர்லாக் உணவளிக்கிறீர்களா? இனி கவனமாக இருங்கள்..!
- 2 hrs ago தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- 3 hrs ago World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
Don't Miss
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Sports அடுத்தடுத்த வீழ்ந்த 2 வீரர்கள்.. சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் நடந்த மாற்றம்.. ஜடேஜா களமிறங்கியது ஏன்?
- News தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு! 2019இல் தேர்தலில் பதிவான வாக்குகள் எவ்வளவு - தொகுதி வாரியான விவரம்
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
நறுமண உணர்வை அதிகரிக்க சில டிப்ஸ்...
மூக்கின் உதவியால் நறுமணத்தை உணர விரும்புவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. ஏனெனில் அது நெருக்கமாக சுவை உணர்வுடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு காரணத்தினால், இது அவசியம். நீங்கள் உணவை சுவைக்கும் பொழுது மூக்கை கிள்ளுவது ஒரு வழி. பொதுவாக, நாம் ஒரு நுண்ணிய மெல்லிய வாசனை உள்ள மலர் அல்லது ஒருவரின் தோல் அல்லது இலையுதிர்காலத்தின் இலைகள், மண்வாசனை போன்ற சில வாசனைகளை கண்டால் மனம் அப்படியே சந்தோஷமாகவும், ஆழமான பரிமாணத்துடனும் விளங்கும். மேலும், ஒரு சராசரி மனிதனின் மூக்கால் கிட்டத்தட்ட 10,000 தனித்துவமான நறுமணங்களை கண்டறிய முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?
2. ஒவ்வொரு பொருளுக்கும், உணவுக்கும் ஒரு தனித்துவமான நறுமணம் உள்ளது. அதனை கண்டறிதல் ஒரு முக்கியமான ஒன்று. ஏனெனில் கண் தெரியாதவன் எப்படி எதையும் வாசனையால் ஒன்றை அறிந்து கொள்கிறான். இந்த வாசனை உணர்வானது நரம்புகளால் மூளையின் உணர்ச்சி பகுதிக்கு நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது.
3. பாஸ்ட் பூட் உணவுகள், பிரட் அல்லது சாலையோர உணவுகளின் வாசனைகள், சாப்பிட வேண்டும் என்ற ஆசையைத் தூண்டும் வாசனைகள், மிளகுக்கீரை மற்றும் இலவங்கப்பட்டையின் வாசனை, நாம் மனம் ஒருமுகப்படுதலுக்கும் வயிற்றில் செரிமானத்தை குறைக்கவும் உதவுகிறது. மேலும் எலுமிச்சை மற்றும் காபியின் வாசனை தெளிவான சிந்தனையையும், ஒருமுகப்படுதலின் அளவை அதிகரிக்கவும் ஊக்குவிக்கிறது என்று ஆய்வுகள் துரிதமாக கண்டறிந்துள்ளன.
4. அதிக சளியை ஏற்படுத்தும் உணவுகளை தவிர்க்க வேண்டும். சளி பிடித்த சமயம் உணவுகளின் வாசனையை உணர இயலாது. அப்பொழுது கெட்டு போன உணவுகளை கண்டறிய முடியாது. மூக்கின் நுனிகளில் உள்ள உணரும் நரம்பு, சவ்வுகளின் நெரிசலால் வாசனை மந்தமாகி உணவின் வாசனையை அறிய முடியாமல் செய்து விடும். அந்த சமயங்களில் மந்தமாக்கும் உணவுகளான பால், சீஸ், தயிர் மற்றும் ஐஸ்கிரீம் போன்றவைகளை தவிர்ப்பது நல்லது.
இதனால் சுவையை பாதிக்கும் வகையில், உங்கள் மூக்கில் உள்ள உணர்வு செல்கள் பின் வழியே உங்கள் தொண்டைக்கு இணைக்கப்பட்டு உள்ளது. அதில் ஏற்படும் நெரிசல் தடையால், அதனை செயலிழக்கச் செய்கிறது.
5. உங்கள் உணவில் அதிகமான துத்தநாகம் இருக்க வேண்டும். வாசனைத்தன்மை குறைவாக இருந்தால், அது உடம்பில் குறைவான கனிம துத்தநாகத்தின் குறைபாட்டை குறிப்பது. எனவே வாசனை உணர்வைப் பெருக்க, துத்தநாகம் நிறைந்த உணவுகளான கடல் சிப்பிகள், பயறு, சூரியகாந்தி விதைகள் போன்றவைகளை அதிகம் சேர்த்து கொள்ளவும். முடிந்த அளவு துத்தநாகம் உள்ள உணவுகளை தினமும் சாப்பிட முயலுங்கள்.
6. உடற்பயிற்சி செய்வதால் வாசனை உணர்வை அதிகரிக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதிலும் ஈரப்பதம் நிறைந்த காற்றை சுவாசித்தால், வாசனை உணர்வு அதிகரிக்கப்படும். துர்நாற்றத்தில் இருந்து விலகி இருங்கள். நீண்ட நேரம் துர்நாற்றத்தை சுவாசித்தால், வாசனை உணரும் திறன், உணர்ச்சியில்லாமல் போய்விடும்.
இதனால் எது நல்ல உணவு, எது கேட்ட உணவு என்று அறியும் தன்மை அதிகரிக்கும். அதனால் மூளை வளர்ச்சியும் அதிகரிக்கும். நன்கு சுவாசியுங்கள், உங்கள் வாசனை திறனை அதிகரித்து கொள்ளுங்கள்.