For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மனச்சோர்வை சமாளிக்க சில ஈஸியான வழிகள்!!!

மனச்சோர்விலேயே உழன்று கிடப்பதால் சாதிக்கப் போவது ஒன்றும் இல்லை. அதிலிருந்து வெளியே வந்தால், நம்மை போல மனச்சோர்வில் அகப்பட்டவர்களுக்கும் உதவலாம்.

By Staff
|

எப்படிப்பட்ட வலிமையான மனிதரையும், மனச்சோர்வு எளிதில் வீழ்த்திவிடும். ஆனந்தமும் வேதனையும் கலந்தது தான் வாழ்க்கை. ஆனாலும் மனச்சோர்வுடன் இருக்கும் போது நம் வாழ்க்கையில் நிகழ்ந்த சோகமான காரியங்கள் மட்டுமே நினைவுக்கு வரும். நண்பர்கள், உறவினர்கள், உடன் பணியாளர்கள், அண்டைவீட்டார், கடவுள் நம்பிக்கை இருக்கிறவர்களுக்கு கடவுள் என நம்முடைய சோகங்களையும், மகிழ்ச்சிகளையும் பகிர்ந்து கொள்ளும் பலர், நம் உலகத்தில் இருக்கிறார்கள். மனச்சோர்விலேயே உழன்று கிடப்பதால் சாதிக்கப் போவது ஒன்றும் இல்லை. அதிலிருந்து வெளியே வந்தால், நம்மை போல மனச்சோர்வில் அகப்பட்டவர்களுக்கும் உதவலாம். இதனால் நம்மை போன்ற பிற மனிதர்களுடைய வாழ்க்கையும் இனிமையாக இருக்க வகை செய்யலாம்.

இத்தகைய மனச்சோர்வில் இருந்து வெளிவருவது எப்படி என்பது குறித்த சில முக்கியமான குறிப்புகளை இங்கே கொடுத்து இருக்கிறோம். நீங்களோ அல்லது உங்களுக்கு அறிமுகமானவர்களோ மனச்சோர்வில் இருந்தால், இவற்றை படிக்குமாறு கூறி, வாழ்வை இனிமையாக்குங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடற்பயிற்சி செய்வது

உடற்பயிற்சி செய்வது

மன அழுத்தத்தை நீக்க சிறந்த வழி உடற்பயிற்சி. இது நல்ல உடல் அமைப்பை கொடுப்பது மட்டுமின்றி, நேரிடையான சிந்தனைகளையும் அதிகரிக்கின்றது. உணர்வுகளை சீர்படுத்துகின்ற செரோடொனின் மற்றும் டெஸ்டோஸ்டெரோன் ஆகியவற்றை சுரக்க உடற்பயிற்சி உதவுகின்றது. அதோடு மனச்சோர்வு அளிக்கும் சிந்தனைகளையும் ஒதுக்கிவிடுகின்றது.

உதவி கேட்பது

உதவி கேட்பது

வாழ்க்கையின் கடினமான சூழ்நிலைகளை கையாள உதவி கேட்பதில் எந்த அவமானமும் இல்லை. வாழ்க்கையின் சுமைகளை தனியாக சுமக்க வேண்டும் என்று யாரும் எதிர்பாப்பது இல்லை. ஆகவே தாய், தந்தை, துணைவர், உடன் பணியாளர் அல்லது நண்பர் இடம் இருந்து உதவி கேட்பது உணர்வுச் சுமையை ஓரளவு குறைக்கும்.

சமச்சீர் உணவு

சமச்சீர் உணவு

பழங்கள், காய்கரிகள், மாமிசம், தானியங்கள் மற்றும் கார்போ ஹைட்ரேடுகள் ஆகிய ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுதல், சிந்தனை சிதறாமல் இருக்க உதவுகின்றன. சமச்சீர் உணவு உடல்நலனையும், மனநலனையும் சீர்படுத்துகின்றது.

சுய விழிப்புணர்வு

சுய விழிப்புணர்வு

வாழ்க்கையின் நிகழ்வுகளை சரியாக புரிந்து கொள்ள முடியாமல், தங்களை அளவுக்கு மீறி அழுத்துவதால் மக்கள் பொதுவாக மனச்சோர்வு அடைகிறோம். எனவே சரியாக தம்மை புரிந்து கொண்டு, அதை சந்தோஷமாக விரும்பி செய்தால், மனச்சோர்வானது நீங்கும்.

எடை குறைத்தல்

எடை குறைத்தல்

மனச்சோர்வுக்கு அதிகமான எடை பிரச்சனையாக இருந்தால், எடையை குறைக்க முயல்வது ஒரு நல்ல தீர்வைத் தரும். மேலும், உடல் வலிமை ஆரோக்கியத்தையும், சுய கருத்துக்கும் நேர்மறையான சிந்தனையை கூட்டுகின்றது.

நண்பர்கள்

நண்பர்கள்

நல்ல நண்பர்கள் தேவையான ஆறுதலையும், வாழ்க்கையின் சோர்வூட்டும் சூழ்நிலையில் இருந்து வெளியே வருவதற்கான ஆலோசனைகளையும் வழங்குவார்கள். மேலும், தேவையுள்ள நேரத்தில், சொல்வதை காதுகொடுத்து கேட்கும் நண்பர் இருந்தால், மனதில் இருக்கும் சந்தேகங்களும், எதிர்மறையான சிந்தனைகளும் முற்றிலும் களைந்துவிடும்,.

டைரி எழுதுவது

டைரி எழுதுவது

தினசரி உணர்வுகளை எழுத்து மூலமாக பதிவு செய்வது சுய பரிசோதனை செய்வதற்கும், ஆராய்வதற்கு ஒரு சிறந்த வழி ஆகும். இவ்வாறு வாழ்க்கையை குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்பதை அனுதினமும் பதிவு செய்தால், மனச்சோர்வில் இருந்து விடுபட ஒரு நல்ல தீர்வு கிடைக்கும்.

எதிர்மறையான மக்களிடம் இருந்து விலகி இருப்பது

எதிர்மறையான மக்களிடம் இருந்து விலகி இருப்பது

தொடர்ச்சியாக பிறரை குறைத்து பேசுகிறவர்களோடு இருக்க யாருமே விரும்ப மாட்டார்கள். அப்படிப்பட்ட மக்களிடம் இருந்து விலகி இருப்பது மன அமைதியையும், சமாதானத்தையும் கொடுக்கும்.

வேலையை விட்டு விடுதல்

வேலையை விட்டு விடுதல்

பிரச்சனைகளின் வேர் வேலையில் இருந்தால், அதை விட்டுவிடுவது மன அமைதியை கொடுக்கும். தனிப்பட்ட மகிழ்ச்சியையும் திருப்தியையும் விட்டுக் கொடுக்காமல், குறிக்கோளை நிர்ணயம் செய்ய வேண்டும். அதற்கு வேலை ஒரு தடையாக இருந்தால், அதை விட்டு விடுங்கள்.

தனிமையாக இருப்பதை தவிர்ப்பது

தனிமையாக இருப்பதை தவிர்ப்பது

மனச்சோர்வோடு இருக்கும் போது, தனிமையில் இருந்தால், மனம் மேலும் சோர்வுடன் தான் இருக்குமே தவிர, அமைதியடையாது. அதற்காக எப்போதுமே கூட்டமாக இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் அவ்வாறு நண்பர்களுடன் சேர்ந்து இருந்தால், அவை முழுமையான தீர்வை கொடுக்காவிட்டாலும், மனச்சோர்வு தரும் சிந்தனைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பும்.

சுற்றுலா செல்லுதல்

சுற்றுலா செல்லுதல்

எதிர்மறையான சிந்தனைகளை அகற்றுவதற்கு, காட்சி அமைப்பை மாற்றுவது எப்போதுமே உதவியாக இருக்கும். வாழ்க்கையில் நேர்மறையான சிந்தனைகளை கொண்டு வர ஒருநாள் பிரயாணம் மேற்கொள்வதற்கு ஈடாக எதுவுமே இல்லை. எனவே மனச்சோர்வின் போது எங்கேனும் வெளியே சென்றால், எளிதில் மனச்சோர்வானது நீங்கும்.

நேர்மறையான எண்ணங்கள்

நேர்மறையான எண்ணங்கள்

வாழ்க்கையில் நேர்மறையாக இருப்பதே மனச்சோர்வு கொடுக்கும் சிந்தனைகளை தவிர்ப்பதற்கான சிறந்த வழி. மனதிலே எதிர்மறை உணர்வுகள் இருக்கின்றன. சிந்தனைகளை நேர்மறையான திசையில் செலுத்துவதன் மூலமாக, மனச்சோர்வின் தாக்கங்களை அகற்றிவிடலாம்.

மனநல வல்லுநரிடம் பேசுவது

மனநல வல்லுநரிடம் பேசுவது

மனச்சோர்வில் இருந்து வெளிவருவதற்கு மிகவும் எளிதான மற்றும் ஆற்றல் வாய்ந்த வழி மனநல வல்லுநரிடம் பேசுவது தான். இதனால் மனச்சோர்வின் வேரை கண்டுபிடித்து அகற்ற முடியும்.

செல்லப்பிராணியை வளர்ப்பது

செல்லப்பிராணியை வளர்ப்பது

செல்லப்பிராணிகள் தங்கள் எஜமான்களிடம் அற்புதமான வழியில் தொடர்பு கொள்கின்றன. தனியாக வாழ்கிறவர்களை காட்டிலும், செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் மனச்சோர்வின் தாக்கங்களில் இருந்து பிழைத்துக் கொள்கிறார்கள் என்று பல ஆராய்ச்சிகள் நிரூபிக்கின்றன. ஆகவே செல்லப்பிராணியுடன் உணர்வுபூர்வமாக தொடர்புகொள்வது, எதிர்ம்றையான உணர்வில் இருந்து வெளிவர உதவும்.

நிகழ்காலத்தில் வாழ வேண்டும்

நிகழ்காலத்தில் வாழ வேண்டும்

இறந்தகால தவறுகளிலும், எதிர்காலத்தின் நிலையின்மையிலும் உழல்வதில் அர்த்தமே இல்லை. அது உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்பதால், அச்சூழ்நிலையில் உங்கள் உணர்வுகளை செலுத்துவது பலன் அளிக்காது. 'எப்போது',‘எங்கே' மற்றும் ‘நாளை' என்பனவற்றுக்கு பதிலாக, 'இப்போது', ‘இங்கே',‘இன்று' என்பனவற்றில் கவனம் செலுத்துங்கள்.

நன்றாக தூங்குவது

நன்றாக தூங்குவது

நேர்மறையான சிந்தனைக்கு திரும்ப ஒருவருக்கு தேவைப்படுவது எல்லாம் ஒரு நல்ல உறக்கமே. இரவு தோறும் 7-8 மணிநேரம் உறங்குவது குறைவான மனச்சோர்வுக்கான அறிகுறிகளை காட்டுவதாக ஆராய்ச்சிகள் நிரூபிக்கின்றன.

இசையை கேட்பது

இசையை கேட்பது

மனச்சோர்வில் இருக்கும் போது, உணர்வை எழுப்பும் இசையை கேட்பது சோர்வடைந்த மனதிற்கு ஊக்கம் அளிக்கும். உணர்வுகளை மாற்றவும், ஆன்மாவை உயர்த்தவும், உணர்ச்சியை அதிகரிக்கவும் உதவும் ஆற்றல் இசைக்கு இருக்கின்றது. எனினும், மிகவும் உணர்வுபூர்வமான பாடல்களை கேட்பதால், எதிர்மறையான விளைவு ஏற்படும் என்பதால், அவற்றை தடுக்க வேண்டும்.

நெருக்கமான உடலுறவை தவிர்க்க வேண்டாம்

நெருக்கமான உடலுறவை தவிர்க்க வேண்டாம்

மனச்சோர்வின் போது உடலுறவு சோர்வு அளிப்பதாக உணர்வது எளித. ஆனால் உண்மையில் உடலுறவு மனச்சோர்வில் வெளியே வருவதற்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்பது பலருக்கும் தெரியாது. ஹார்மோன் உட்புகுதல்கள் மனச்சோர்வை சீர்படுத்தி, மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம் அளிக்கின்றன.

வைட்டமின் சேர்க்கைகள்

வைட்டமின் சேர்க்கைகள்

ஊட்டச்சத்து குறைபாடுகளும் மனச்சோர்வு அளிக்கும் சிந்தனையை விளைவிக்கலாம். இதனால் வெளிப்படும் அறிகுறிகளை மருத்துவரிடம் ஆலோசித்து, சமன்பாட்டை சரிசெய்ய வைட்டமின் சேர்க்கைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to deal with depression

Depression drains your energy, hope, and drive, making it difficult to do what you need to feel better. Feeling better takes time, but you can get there if you make positive choices for yourself each day.
Desktop Bottom Promotion