Just In
- 1 hr ago இந்த பிரபல சீரியல் கில்லர்களின் கடைசி வார்த்தைகள் அவங்க பண்ணுன கொலைகளை விட பயத்தை கொடுப்பதாக இருந்ததாம்...!
- 4 hrs ago புடலங்காயை ஒருமுறை இந்த மாதிரி செய்யுங்க.. கிலோ கணக்குல செஞ்சாலும் காலியாயிடும்...
- 5 hrs ago உடலின் இந்த பகுதிகளில் அடிக்கடி வீக்கம் ஏற்படுதா? அப்ப உங்க கல்லீரல் மோசமான நிலையில் இருக்குன்னு அர்த்தம்...
- 6 hrs ago இந்த 4 ராசி பெண்களுக்கு அவர்களின் பெண் நண்பர்களை விட ஆண் நண்பர்களைத்தான் பிடிக்குமாம்... உங்க ராசி என்ன?
Don't Miss
- News ஜாபர் சாதிக் செல்போனில் முக்கியமான கான்டாக்ட்ஸ்? நீதிமன்ற காவலை நீட்டித்து கோர்ட் உத்தரவு!
- Sports ரசிகர்கள் என்ன பணம் கறக்கும் மெஷினா? ஆர்சிபி அணியின் செயல்.. கொந்தளிக்கும் கிரிக்கெட் ஆர்வலர்கள்
- Movies Kanguva Teaser: பெருமாச்சி!.. வெளியானது கங்குவா டீசர்.. பில்டப் பண்ண அளவுக்கு வொர்த்தா? இல்லையா?
- Education இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் காத்திருக்கும் நர்ஸ் வேலை...!!
- Travel நீங்க உங்க குழந்தைகளோடு இன்னும் சென்னையில உள்ள இந்த பூங்காக்களுக்கு சென்றது இல்லையா – இப்போதே செல்லுங்கள்!
- Finance பெங்களூர் டூ லட்சத்தீவு.. இண்டிகோ-வின் நேரடி விமான சேவை, அடிதூள்.. டிக்கெட் விலை என்ன..?
- Technology லிவ்வின் தம்பதியின் கைவரிசை.. போலி UPI ஆப்ஸ் மூலம் கட்டணம்.. தங்கம் திருடிய ஜோடி மாட்டியது எப்படி?
- Automobiles ரூ.199க்கு கார் கண்ணாடியா!! அதிக உறுதியான பின் பக்கத்தை பார்க்க உதவும் யுனோ மிண்டா-வின் கண்ணாடிகள் அறிமுகம்!
மகளிரின் நோய்களுக்கான அருமருந்து வில்வம்
வறண்ட மலைப்பிரதேசங்களிலும், இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் காணப்படும் வில்வமரம், இந்துக்களில் சைவ சமயத்தவர்கள் புனிதமாக வழிபடுகின்றனர். சிவபூஜையில் வில்வ இலைகள் பயன்படுத்தப்படுகின்றன. சிவன் துதியில் “ ஏக வில்வம் சிவா அர்ப்பணம் " என கூறப்பட்டுள்ளது.
செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள்
இத்தாவரத்தின் பல முக்கிய வேதிப்பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. அமினோ அமிலங்கள், டிக்டஅமைன், மார்மெசின், மார்மின்,அம்பெல்பெரோன், மர்மிலோசின், ஏஜிலைன், ஆந்த்தோகயனின், ஃபிளேவன், குளுக்கோசைட்டுகள், பால்மிடிக் லினேலெயிக் ஒலியிக் அமிலங்களும் உள்ளன.
மனஉளைச்சல் நீக்கும் வில்வம்
இலைகள், பட்டை, வேர் மற்றும் கனிகள் மருத்துவப்பயன் உடையவையாகும். இலைகள் ஆஸ்துமா, காய்ச்சல் மற்றும் சளி போக்கும். பட்டை இதயத்துடிப்பு, விட்டுவிட்டு வரும் காய்ச்சல் மன உளைச்சல் ஆகியவற்றை தீர்க்கும்.
“தசமூல" என்னும் முக்கிய ஆயுர்வேத மருந்து தயாரிப்பில் வில்வ வேர் முக்கிய பங்காற்றுகிறது. இது பசியின்மை மற்றும் மகப்பேறுக்கு பின் ஏற்படும் நோய்களுக்கு சிறந்த மருந்தாகும்.
அஜீரணம் போக்கும்
கனிகள் முக்கிய உறுப்பு ஆகும். உடல்நலம் தேற்றும். குளிர்ச்சி தரும். வைட்டமின் சி நிறைந்தது. ஊட்டம் தருவது. மலமிளக்கி, தொடர்ந்த மலச்சிக்கல், தொடர்ந்த வயிற்றுப்போக்கு, அஜீரணம், ஆகியவற்றினை தீர்க்கும். வலுவேற்றியாகவும் உதவுகிறது. காய் தசை இறுக்கும் தன்மை கொண்டது. விதைகள் மலமிளக்கி, மலர்கள் வயிற்றுப்போக்குக்கு எதிரானது. வாந்தியை நிறுத்துகின்றன.