For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காட்டுத்தீ போல இளைஞர்களை பாதித்து வரும் மாரடைப்பு!

|

இந்தியாவில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் நான்கு நபர்கள் மாரடைப்பின் காரணமாக உயிரிழக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் 30-50 வயதுடையவர்கள். இந்தியாவில் இன்றைய நிலையின் படி, மாரடைப்பு ஏற்படுபவர்களில் 25% பேர் 40 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ஒரு நாளுக்கு 30 வயதிற்குள் இருக்கின்ற 900 மக்கள் மாரடைப்பின் காரணமாக உயிரிழக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளினுள் இளைஞர்களை பாதிக்கும் நோய்களில் முன்னிலை பெற்றுள்ளது மாரடைப்பு. இதில் அபாயமான விஷயம் என்னவெனில், பெரும்பாலானோர் அவர்களுக்கு இதய கோளாறு ஏற்படுவது தெரியாமலேயே இறந்துள்ளனர் மற்றும் முதல் மாரடைப்பு ஏற்பட்ட போதே உயிரிழந்துள்ளனர்.

இதயம் வலுவடைய உதவும் பழங்கள்!!!

மிகவும் அமைதியாக காட்டுத்தீ போல இளைஞர்களை பாதித்து வருகிறது மாரடைப்பு நோய். இவர்களுக்கு ஏற்படும் இதய கோளாறுகள், மாரடைப்பு பற்றிய அறிகுறிகள் பற்றி இவர்களுக்கு தெரிவதில்லை. மிகவும் சாதரணமாக நாம் நினைக்கும் சில விஷயங்களான, நெஞ்செரிச்சல், வயிற்று வலி, மார்பு மற்றும் தோள்பட்டை வலிகள் கூட இதற்கான காரணிகளாய் இருக்கின்றது. எனவே, இளைஞர்கள் இதைப் பற்றி கவனாமாகவும், எதையும் சின்ன சின்னதென தவிர்த்துவிடாது முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது முக்கியம். சரி இனி இளைஞர்கள் மத்தியில் பரவி வரும் இதய கோளாறுகளுக்கான அறிகுறிகள் பற்றி அறிந்துக் கொள்ளலாம்...

ஆளி விதை சாப்பிடுங்க... நீரிழிவு மற்றும் இதய நோயை கட்டுப்படுத்துங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சோர்வு

சோர்வு

இன்றைய கணினிமயமான உலகில், இரவு, பகல் என மாறி மாறி வேலைப்பார்க்கும் வழக்கம் சாதாரணமாகிவிட்டது. இதன் காரணமாக அவர்கள் மிகவும் சோர்வடைகின்றனர். ஆனால், அவர்கள் அறிய வேண்டிய முக்கியமான விஷயம் சோர்வு ஏற்படுவதும் கூட ஒருவகையான இதய கோளாறுகளின் அறிகுறி தான். அதுவும், வேலை வலுவின்றி இருக்கும் போது கூட ஏற்படும் உடல் சோர்வு இதய பாதிப்பின் காரணாமாக ஏற்படுவது தான்.

முதுகு, தோள்பட்டை வலி

முதுகு, தோள்பட்டை வலி

முதுகு, தோள்பட்டை மற்றும் இடுப்பு பகுதிகளில் ஏற்படும் வலிகள் கூட மாரடைப்பிற்கான அறிகுறிகள் தான். இதயத்தில் ஆக்ஸிஜனின் அளவு குறையும் போது இவ்விடங்களில் வலிகள் ஏற்பட வாய்ப்புகள். எனவே, இதுபோன்ற வலிகள் ஏற்படும் போது குறித்த மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்வது நல்லது.

மூச்சுவிடுவதில் சிரமம்

மூச்சுவிடுவதில் சிரமம்

மாடி படி ஏறி இறங்கும் போது, சிறிது தூரம் நடந்து சென்றால் மூச்சு வாங்குவது, ஏன் சிறு வேலை செய்யும் போது கூட மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுவது போன்றவையும் இதய பாதிப்புகளுக்கான அறிகுறிகள் தான்.

நெஞ்செரிச்சல்

நெஞ்செரிச்சல்

காரமான உணவுகளோ அல்லது மசாலா நிறைந்த உணவுகளோ சாப்பிட்டால் கூட நெஞ்செரிச்சல் வரும். அது பற்றி கவலைக் கொள்ள தேவையில்லை. ஆனால், இதயத்தில் இரத்த ஓட்டம் குறையும் போது கூட இது போன்ற நெஞ்செரிச்சல் ஏற்படலாம். எனவே, மருத்துவரிடம் அணுகி பரிசோதித்து கொள்வது நல்லது.

வயிறு உப்புசம்

வயிறு உப்புசம்

இதய பாதிப்புகள் ஏற்படும் போது, வயிறு சார்ந்த கோளாறுகளும் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. இது இதய நோய்களுக்கான அறிகுறிகள். குமட்டல் ஏற்படுவது, வயிறு உப்புசமாக இருப்பது போன்றவை உங்களுக்கு இதய நோய் ஏற்படுவதற்கான அலாரமாய் இருக்கலாம்.

அசௌகரியம்

அசௌகரியம்

கழுத்து, தொண்டை, தாடை பகுதிகளில் அசௌகரியம் ஏற்படுவது. ஏதோ இறுக்கமாக பிடித்து வைத்தது போல இருப்பவை போன்றவை எல்லாம் மாரடைப்பு ஏற்படுவதற்கான முன்னெச்சரிக்கைகளாக கூறப்படுகிறது.

மனநிலை

மனநிலை

மாரடைப்பு ஏற்பட்டவர்களில் பலர் மருத்துவர்களிடம், சில நாட்களாகவே எனது மனநிலை சரியாக இருக்கவில்லை என கூறியிருக்கின்றனர். பலருக்கு இது போன்ற மனநிலை ஏற்படுகிறது. இதுவும் கூட மனநிலை சார்ந்த ஒரு அறிகுறியாக மாரடைப்பிற்கு கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

7 Silent Signs of a Heart Attack

There are 7 silent signs of a heart attach which strikes youngsters badly, read here.
Desktop Bottom Promotion