Just In
- 1 hr ago போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- 1 hr ago Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- 2 hrs ago கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- 3 hrs ago திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
Don't Miss
- News வாக்காளர் பட்டியலில் பெயரை நீக்கிவிட்டதாக போராடிய கோவை பாஜகவினர் கையில் ஓட்டு போட்ட மை!
- Movies Baakiyalakshmi serial: பழனிச்சாமி -பாக்கியா திருமணம்.. செல்வி சொன்ன விஷயம்.. உறைநத பழனிச்சாமி!
- Technology போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இந்த 4 உணவுகளையும் மீந்து போனா சாப்பிடவே கூடாது!! ஏன் ?
மீந்து போன மற்றும் நெடு நாட்கள் வைத்து சாப்பிடும் உணவுகள் நமது உடல் நலத்திற்கு கேட் விளைவிப்பவை. அவ்ற்றைப் பற்றி விரிவாக இங்கு காண்போம்.
நாம் உணவுகளை வீணடிக்கக் கூடாது என பலவற்றை பல நாட்களாக வைத்து சாப்பிடுகிறோம். அது மிகவும் உடலுக்கு நச்சை விளைவிக்கும் என்பதை நீங்கள் அறிவீர்களா?
சில உணவுப் பொருட்களை அதிக நாட்கள் ஃப்ரிட்ஜில் வைத்திருக்கக் கூடாது. சில வகை உணவுகளை மீந்து போய் சாப்பிடக் கூடாது. அப்படி சாப்பிட்டால் என்னாகும்? தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
காய்கறிகள் :
நாம் நிறைய காய்கறிகளை வாங்கி வாரக்கணக்கில் ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகிப்போம். ஆனால் சில வகை காய்களுக்கு நச்சை உற்பத்தி செய்யும் பண்பு இருகிறது. பீட்ரூட், பசலைக் கீரையை அதிக நாட்கள் வைத்திருந்தால் அவை நைட்ரேட்டை உற்பத்தி செய்யும்.
இதனால் அவை காய்களிலேயே தங்கி அதனை சாப்பிடும்போது உடலில் நைட்ரேட் நச்சை அதிகப்படியாக உண்டாக்கி செல்களை சிதைக்கும். ஆகவே இந்த காய்கறிகளை அதிக நாட்கள் வைத்திருக்கக் கூடாது.
சிக்கன் :
சிக்கனில் அதிக புரதம் உள்ளது. இதனை 2 நாட்களுக்கு மேல் உபயோகிக்கக் கூடாது. குறிப்பாக திரும்ப சுட வைத்து சாப்பிடுவது நல்லதல்ல. இதய நோய்கள், கல்லீரல் பிரச்சனை ஆகியவ்ற்றை கொண்டு தரும்.
அரிசி :
அரிசியை சமைத்தாலும் தீய பேக்டீரியாக்கள் அரிசியில் பெருக அதிக வாய்ப்புண்டு. அதனை திரும்ப சுட வைத்தாலும் உயிரோடே இருக்கும். இவை இரட்டிப்பாகி பல்வேறு ஜீரண சம்பந்த நோய்களை உண்டாக்கும்.
ஆகவே அரிசியை ஒரு முறைதான் சமைக்க வேண்டும். திரும்ப சுட வைக்கக் கூடாது, வேண்டுமானால் மீந்த அரிசி உணவில் நீர் ஊற்றி சாப்பிடுவதால் நேர்மறை நன்மைகளை தரும்.
வெஜிடேபிள் எண்ணெய் :
சூரிய காந்தி எண்ணெய் மற்றும் மக்காசோள என்ணெய் ஆகியவ்ற்றை திரும்ப சூடு வைப்பது போல் தீயது வேறெதுவுமில்லை.
அவற்றிலுள்ள நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் லினோலியிக் அமிலமாக மாறி இதய நோய்கள், பக்க வாதம் மற்று புற்று நோய்களை தருகிறது. ஆகவே திரும்ப திரும்ப ஒரே எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்தவே கூடாது.