Just In
- 4 min ago தினமும் 10 பவுன் தங்கத்தை தூசியாக உமிழும் அதிசய எரிமலை... இந்த எரிமலையா இல்ல தங்கச்சுரங்கமானே தெரிலயே...!
- 34 min ago இந்த அறிகுறிகள் காலை வேளையில் தெரியுதா? அப்ப கல்லீரல் ஆபத்தில் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்..
- 1 hr ago குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- 2 hrs ago மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
Don't Miss
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Movies தேனிலவுக்கு சென்றபோதுதான் அந்த விஷயமே புரிந்ததாம்.. ஐஸ்வர்யா ராய் என்ன இப்படி சொல்லிட்டாங்க?
- News இதுக்கு எதுக்கு தட்கலில் டிக்கெட் புக் பண்ண வேண்டும்? ஏசி 2ம் வகுப்பு பெட்டியிலேயே இதுதான் நிலைமை
- Automobiles ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Finance பருவநிலை மாற்றத்தால் உலகமே வறுமையில் வாடப் போகிறது – எச்சரிக்கும் ஆய்வறிக்கை
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
உங்கள் நெஞ்செரிச்சலை அதிகப்படுத்தும் முக்கிய 5 காரணங்கள் !!
நெஞ்சு கரிப்பது போன்று உணர்வு, நாவில் கசப்புத் தன்மை, மற்றும் தொண்டை வரை எரிச்சல் இருந்தால் அதனை நெஞ்செரிச்சல் என்று சொல்வார்கள். இது நோயோ, பிரச்சனையோ அல்ல. ஏதாவது பாதிப்பின் அறிகுறி.
நெஞ்செரிச்சல் எப்பவாவது ஏற்பட்டால் பரவாயில்லை. ஆனால் எப்போதும் இருந்தால் அதற்கு சிகிச்சை அவசியம். தகுந்த பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும்.
வயிற்றுப் பகுதிகளில் ஜீரணிக்க உதவும் நொதிகள், அங்கு உண்டாகும் அழுத்தத்தால் உணவுகுழாயின் மேலே வரை செல்லும். இதனால் அமிலத்தன்மை தொண்டை வரை பரவி எரிய ஆரம்பிக்கும். இதுதான் நெஞ்செரிச்சல்.
நெஞ்செரிச்சல் வருவதற்கு உண்ணும் உணவுகள், மன அழுத்தம், உறுப்புகள் பாதிப்பு என பல காரணங்கள் இருக்கிறது. இது ஒரு நோயல்ல. அறிகுறி.
உங்களுடைய காலை காபி :
பொதுவாக தூங்கி எழுந்ததும் என்சைம்கள் சுரக்க ஆரம்பிக்கும். காரணம் அப்போது கார்டிசால் என்ற ஹார்மோன் அதிகம் தூண்டப்படுவதால் ஜீரண மண்டலம் வேலை செய்ய தொடங்கும்.
அந்த சமயத்தில் வெறும் வயிற்றில் காபி குடிக்கும்போது அதிக என்சை சுரப்பதால் நெஞ்செரிச்சல் அதிகமாகும். ஆகவே நீர் குடித்துவிட்டு அரை மணி நேரத்திற்கு பின் காபி குடிக்கவேண்டும்.
இரவுகளில் இதை குடிப்பதால் :
இரவில் மது அதிகமாக குடிக்கும்போது அது எச்சில் சுரப்பை கட்டுப்படுத்தும். எச்சில் , குடலில் படிந்திருக்கும் அதிகப்படியான அமிலத்தை அப்புறப்படுத்தும்.
மது எச்சில் சுரப்பை கட்டுப்படுத்தும்போது அமிலம் அதிகமாகி நெஞ்செரிச்சலை உண்டாக்கும்.
புதினா கம் மெல்லுவீர்களா?
புதினாவினால் செய்த பொருட்களுமே உங்கள் நெஞ்செரிச்சலை கட்டுப்படுத்தாது. மாறாக அதிகப்படுத்தும்.
புதினா சூயிங்கம் பற்களுக்கு பாதுகாப்பானதென்றாலும் அது வயிற்றிலுள்ள தசைகளை தளரச் செய்வதால் அதிக என்சைம்களை சுரக்கச் செய்து நெஞ்செரிச்சலை உண்டாக்கிவிடும்
தாமத இரவு உணவு :
இரவுகளில் தாமதமாக உண்டால் நெஞ்செரிச்சல் அதிகமாகும். தூங்கப்போவதற்கு 2 மணி நேரம் முன்பாக இரவு உணவை கட்டாயம் முடித்துக் கொள்ள வேண்டும்.
சாப்பிடும் உணவுகள் :
இரவு என்ன உணவுகள் சாப்பிடுகிறீர்கள் என்பது முக்கியம். உருளைக் கிழங்கு, போன்ர வாயு தரக் கூடிய உணவு, மசாலா உணவுகள் அதிக காற்றை உடலில் உற்பத்தி செய்கின்றன.
இவை என்சைம் சுரப்பை அதிகப்படுத்தும். விளைவு நெஞ்செரிச்சல் அதிகமாகும். பொதுவாகவே மசாலா, வாய்வு தரக் கூடிய உணவுகளை சாப்பிடுவதை கட்டுப்படுத்த வேண்டும்.