Just In
- 39 min ago Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- 1 hr ago சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- 1 hr ago புடவை கட்டினால் புற்றுநோய் வருகிறதாம்.. ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்..!
- 3 hrs ago வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
Don't Miss
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- News அண்ணாமலையின் பாட்டி.. முளைத்த விவாதம்.. இதைவிடுங்க, பிரியங்கா, ராகுல் காந்தியை மீண்டும் சீண்டிய பாஜக
- Finance உங்ககிட்ட கிழிஞ்ச ரூபாய் நோட்டு இருக்கா.. அப்போ கண்டிப்பா இந்த பதிவு உங்களுக்குத்தான்!
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Movies தங்கலான் திரைப்பட இசை..ஜிவி பிரகாஷ் என்ன சொல்றாரு பாருங்க.. சம்பவம் இருக்காம்
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
வாய்வு தொல்லையால் நம்மை அவஸ்தைப்பட வைக்கும் உணவுகள்!
உடலில் இருந்து வாய்வு வெளியேற்றம் என்பது எவராலும் தவிர்க்க முடியாத ஒன்று. உடலில் வாயுவானது உணவுகள் செரிமானமாகும் போது மற்றும் உணவு உட்கொள்ளும் போது சேர்கிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஒருவரது உடலில் வாயு அதிகரிக்கும் போது, அதன் விளைவாக ஏப்பம், வாய்வு தொல்லை அல்லது வயிற்று உப்புசம் போன்றவற்ற சந்திக்க நேரிடும்.
ஒரு மனிதன் சராசரியாக ஒரு நாளைக்கு 14 முறை வாயுவை வெளியேற்றுவான். ஆனால் வாய்வு தொல்லை இருக்கும் போது, எந்நேரமும் வெளியேற்றியவாறே இருக்கக்கூடும். இதனால் தர்ம சங்கடத்தையும், அசௌகரியத்தையும் உணரக்கூடும்.
வாய்வு தொல்லையால் கஷ்டப்படும் போது உண்ணும் உணவுகளில் ஒருசில மாற்றங்களைக் கொண்டு வந்தால், அதிலிருந்து விடுபடலாம். இங்கு வாய்வுத் தொல்லையை ஏற்படுத்தும் சில உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
பீன்ஸ் வகைகள்
பீன்ஸ் வகைகளில் காம்ப்ளக்ஸ் சர்க்கரை உள்ளது. உடலால் இந்த காம்ப்ளக்ஸ் சர்க்கரையை செரிப்பதில் சிரமம் ஏற்படும். எனவே பீன்ஸ் வகைகளை சமைக்கும் போது, ஊற வைத்து பின் சமைத்து சாப்பிடுங்கள்.
பால் பொருட்கள்
லாக்டோஸ் சகிப்புத்தன்மை உள்ளவர்கள், பால் பொருட்களை உட்கொண்டால், அதனால் கடுமையான வாய்வு பிரச்சனையால் அவஸ்தைப்படக்கூடும். எனவே வாய்வு தொல்லை இருக்கும் போது, பால் பொருட்கள் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
முழு தானியங்கள்
முழு தானியங்களான கோதுமை, ஓட்ஸ் போன்றவற்றில் ஸ்டார்ச், நார்ச்சத்து மற்றும் ரஃபினோஸ் என்ற காம்ப்ளக்ஸ் சர்க்கரை உள்ளது. எனவே இவற்றை அதிகமாக உட்கொள்ளும் போது, வாய்வு பிரச்சனையால் அவஸ்தைப்படக்கூடும்.
காய்கறிகள்
அஸ்பாரகஸ், காலிஃப்ளவர், முட்டைகோஸ் மற்றும் ப்ராக்கோலி போன்ற காய்கறிகள் அதிகப்படியான வாயுவை உருவாக்கும். ஆகவே வாய்வு பிரச்சனையால் கஷ்டப்படும் போது இந்த காய்கறிகளை அதிகம் உட்கொள்ளாதீர்கள்.
சோடா பானங்கள்
பலர் சோடா குடித்தால் வாய்வு பிரச்சனை நீங்கும் என்று சொல்வார்கள். ஆனால் அது முற்றிலும் பொய். உண்மையில் சோடா பானங்களை அதிகம் பருகினால், வாய்வு தொல்லையை அதிகம் சந்திக்கக்கூடும். எனவே சோடா குடிக்கும் பழக்கம் இருந்தால் உடனே அதை கைவிடுங்கள்.
பழங்கள்
பழங்களில் பீச், முந்திரிப்பழம், ஆப்பிள் போன்றவற்றில் சோர்பிடால் மற்றும் இயற்கை சர்க்கரை உள்ளது. உடலால் இந்த பழங்களை செரிக்க சிரமமாக இருக்கும். மேலும் பெரும்பாலான பழங்களில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இது பெருங்குடலில் உள்ள பாக்டீரியாக்களால் செரிமானமாகும் போது, ஹைட்ரஜன், மீத்தேன் வாயு மற்றும் கார்பன்-டை-ஆக்ஸைடு போன்றவற்றை உற்பத்தி செய்யும். இதனால் வாய்வு தொல்லைக்கு உள்ளாகக்கூடும்.
வெங்காயம்
வெங்காயத்தில் ஃபுருக்டோஸ் என்னும் இயற்கை சர்க்கரை உள்ளது. இந்த சர்க்கரையை பாக்டீரியாக்கள் உடைக்கும் போது, உடலில் வாயுக்களின் உற்பத்தி அதிகமாக இருக்கும். எனவே வாய்வு தொல்லை இருந்தால் வெங்காயத்தை அதிகம் சாப்பிடாதீர்கள்
சூயிங் கம்
சூயிங் கம்மை மெல்லும் போது அதிகப்படியான காற்றை உள்ளிழுக்க நேரிடும். இப்படி அதிகப்படியான காற்றை உள்ளிழுக்கும் போது, அது வாய்வு தொல்லையை உண்டாக்கும். மேலும் இந்த சூயிங் கம்மில் சேர்க்கப்படும் சுவையூட்டிகள் செரிமானமாக நீண்ட நேரம் ஆவதோடு, உடல் மிகுந்த சிரமத்தை சந்திக்க நேரிடும். ஆகவே அடிக்கடி சூயிங் கம் சாப்பிடும் பழக்கத்தை கைடுவிங்கள்.