Just In
- 26 min ago உங்களுக்கான அதிர்ஷ்ட மோதிரம் எது தெரியுமா? தங்கமா, வெள்ளியா?
- 1 hr ago ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- 2 hrs ago 11 வயது சிறுமியை அம்மாவும்-மகனும் சேர்ந்து கடத்திய வினோதம்... எதுக்காக கடத்துனாங்க தெரியுமா?
- 3 hrs ago இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
Don't Miss
- News ஆம்பளையா பொறந்ததுல ஒரே அட்வான்டேஜ்.. அடிக்கிற வெயிலுக்கு பனியன், டவுசரோட சுத்தலாம்!
- Sports தோனியால் 2 - 3 ஓவர்கள் தான் விளையாட முடியும்.. ஏன் தெரியுமா? காரணத்தை சொன்ன பயிற்சியாளர் பிளெமிங்!
- Technology புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Movies Blue sattai Maaran: தற்போதைக்கு திருந்திய.. விஜய் ஆண்டனி கருத்துக்கு ப்ளூ சட்டை மாறன் பதிலடி!
- Automobiles டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Finance தங்கம் விலை பொசுக்குனு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
அருகம்புல்லின் ஆயுர்வேத நன்மைகள்!
அருகம்புல் என்பது நாம் அதிகம் விநாயகருக்கு கோவிலில் படைக்க மட்டுமே அதிகம் பயன்படுத்துகிறோம். நமது வீட்டு வாசல், தெரு ஓரங்களில்,வெற்று இடங்களில் அனாமத்தாக விளையும் இந்த அருகம்புல் உடலுக்கு தேவையான அனைத்து நன்மைகளையும் தரவல்லது.
அருகம்புல் ஓர் அற்புதமான மூலிகை மருந்தாகும். ஆயுர்வேத முறையில் இதை பல உடல் உபாதைகள், உடல்நலக் கோளாறுகளுக்கு அருமருந்தாக பயன்படுத்துகின்றனர். உடல் பருமனை குறைப்பதில் இருந்து, தாய்பால் நன்கு சுரக்க வைக்கும் வரை பல நன்மைகளை அளிக்கிறது அருகம்புல்!
நன்மை #1
வாழைத்தண்டு, பூசணி மற்றும் அருகம்புல், இந்த மூன்றில் ஏதேனும் ஒரு சாற்றை தொடர்ந்து குடித்து வந்தால், உடல் பருமன் அதிகரிக்காமல் பாதுகாக்க முடியும்.
நன்மை #2
அருகம்புல் சாற்றை தாய்ப்பாலுடன் கலந்து குடித்து வந்தால் கண்ணில் சதை வளர்வதை தடுக்க முடியும்.
நன்மை #3
அருகம்புல் சாற்றுடன் தேன் கலந்து தினமும் காலை உண்டு வந்தால் உடலில் உள்ள ஊழைச்சதை குறையும். உடல் வலிமை அடையும்.
நன்மை #4
அருகம்புல், செவ்வாழைப்பழம், மாதுளம் சாறு இந்த மூன்றையும், தினமும் உங்கள் உணவில் சேர்த்து வந்தால் கருப்பை வலுமை அடையும்.
நன்மை #5
சிரங்கு பிரச்சனை இருப்பவர்கள் அருகம்புல் மற்றும் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து உடலில் பூசி, 1 மணிநேரம் நன்கு காய்ந்த பிறகு குளித்து வந்தால் நல்ல தீர்வு காண முடியும்.
நன்மை #6
மாதுளம் மற்றும் அருகம்புல் சாறு இதை இரண்டையும் சம அளவு கலந்து 30 மில்லி அளவு மூன்று வேலை பருகி வந்தால் மூக்கில் இரத்தம் வழியும் பிரச்சனைக்கு தீர்வுக் காணலாம்.
நன்மை #7
அருகம்புல் சாற்றை தினமும் காலை 10 மில்லி அளவு குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
நன்மை #8
ஒரு கைப்பிடி அளவு அருகம்புல்லை நறுக்கி நீரில் கொதிக்க வைத்து அத்துடன் பால் மற்றும் சர்க்கரை கலந்து குடித்து வந்தால் சிறுநீர்ப்பை வலுமையடையும்.
நன்மை #9
உடல் வலியாக உணரும் நபர்கள், அருகம்புல்லும், வில்வ இலையும் சேர்த்து சாறு பிழிந்து காலை, மாலை இருவேளை 1 அவுன்ஸ் அளவு குடித்து வந்தால் உடல் வலி நீங்கும்.
நன்மை #10
தாய்பால் குறைவாக சுரக்கும் பெண்கள், அருகம்புல்லுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், தாய் பால் அதிகம் சுரக்கும்.