Just In
- 29 min ago எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- 3 hrs ago Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- 9 hrs ago 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- 9 hrs ago 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
Don't Miss
- Movies மாமியார் உதட்டில் முத்தம்.. ரோபோ சங்கர் மருமகன் விளக்கம்.. என்ன சொல்லிருக்காரு பாருங்க?
- News ஒரு ஓட்டுக்காக போராடிய "சர்க்கார்" விஜய் நிலையா இது.. கட்சி தலைவரான முதல் தேர்தலிலேயே ஏமாற்றம்
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பழங்களை பழுக்க வைக்க கால்சியம் கார்பைடு பயன்பாடு, புற்றுநோயை ஏற்படுத்துமா? - அதிர்ச்சி!!!
இரசாயனங்கள் கலப்பு இல்லாத உணவே இல்லை என்ற நிலையில் தான் நாம் வாழ்ந்துக் கொண்டிருகிறோம். இந்த வகையில் இம்மாதத்தில் மேகி சிக்கி சின்னாபின்னமாகிப் போனது. அதன் பிறகு பேக்கேஜ் செய்து விற்கப்படும் பெரும்பாலான பொருட்களை சோதனை செய்ய அரசும் உத்தரவிட்டது.
காய்கறி, பழங்களில் பூச்சிக்கொல்லி அடிப்பதனால் ஏற்படும் உடல்நல அபாயங்கள் - அதிர்ச்சி!!!
ஒருவேளை இவ்வாறான தயாரிப்பு உணவுகளில் மட்டும் தான் இரசாயனம் பயன்படுத்தப்படுகிறது என்று நினைத்தால். இயற்கை உணவுகள் என்று நாம் நம்பி வாங்கும் காய்கறி, பழங்களில் கூட இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் நிறத்திற்காகவும், கவர்ச்சிக்காகவும், நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கவும் இரசாயனங்கள் பயன்படுத்துகின்றனர்.
நீங்க குடிக்கிற கூல்டிரிங்ஸ்'ல பூச்சிக்கொல்லி எவ்வளோ % கலக்கப்படுதுன்னு உங்களுக்கு தெரியுமா???
இவையெல்லாம், சீக்கிரம் பழுக்காமல் இருப்பதற்காக, ஆனால், மாம்பழங்கள் சீக்கிரம் பழுக்க வேண்டும் என்பதற்காக, அவை காயாக இருக்கும் போதே, அதை விரைவில் பழுக்க வைக்க சில இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகிறது, இவற்றால் தான் புற்றுநோய் ஏற்படும் அபாயம் நிறைய இருக்கிறது என கூறப்பட்டுள்ளது.....
கால்சியம் கார்பைடு (CaC2)
பெரும்பாலும் செயற்கையாக பழங்களை பழுக்க வைக்க இந்த கால்சியம் கார்பைடு தான் சந்தையில் பயன்படுத்தப்படுகிறது. இதில் ஆர்செனிக் மற்றும் பாஸ்பரஸ் போன்றவை இருப்பது குறிப்பிடத்தக்கது.
மனிதர்களுக்கு அபாயமானது
ஆர்செனிக் மற்றும் பாஸ்பரஸ் (arsenic and phosphorus), ஆகிய இந்த இரண்டும் மனிதர்களின் உடல்நலத்திற்கு அபாயகரமானது. Cac2 புற்றுநோயை உண்டாக்கக்கூடிய தன்மை உடையது. மற்றும் இது மனித உடலில் இருக்கும் செல்களை புற்றுநோய் செல்களாக மாற்றக்கூடிய கொடியதும் ஆகும்.
தடைசெய்யப்பட்ட இரசாயனம்
இந்திய உட்பட உலகின் பெரும்பாலான நாடுகளில் தடைசெய்யப்பட்ட இந்த இரசாயனம், மிக சாதாரணமாக சந்தைகளில் விற்கப்படுகிறது. வாழைப்பழம், தர்பூசணி, மாம்பழம் போன்ற பழங்களில் பெரும்பாலும் இந்த இரசாயனத்தை பயன்படுத்துகின்றனர்.
கால தாமதம்
இயற்கையாக ஓர் பழம் பழுக்க வேண்டும் எனில் அதற்கு ஏற்ற காலத்தை அது எடுத்துக்கொள்ளும். ஆனால், நிறைய சம்பாதிக்க வேண்டும். உடனே பணம் பார்க்க வேண்டும் மற்றும் வருடம் முழுக்க அந்த பழங்களை சந்தையில் விற்க வேண்டும் என்பதற்காக, CaC2 போன்ற இரசாயனங்கள் சந்தையில் விற்கப்படுகிறது.
சரும பிரச்சனைகள்
கால்சியம் கார்பைடு புற்றுநோய் மட்டுமல்லாது, சரும அழற்சிகள், தடித்தல், மற்றும் சரும புற்றுநோய் போன்ற அபயாமான சரும நல பாதிப்புகளை உண்டாக்குகிறது.
பழங்களை நன்கு கழுவ வேண்டும்
ஆகவே, இதில் இருந்து உடல்நல அபாயம் ஏற்படாமல் தப்பிக்க, சந்தையில் வாங்கும் பழங்களை நன்கு கழுவிய பிறகு பயன்படுத்துங்கள் என மருத்துவர்கள் அறிவுரை கூறுகின்றனர்.
எச்சரிக்கை
எனவே, மால்களிலும் மட்டுமின்றி, பழங்கள் மற்றும் காய்கறிகளை சந்தையில் வாங்கும் போதும் கூட, மிகுந்த எச்சரிக்கையுடன் வாங்குங்கள். மற்றும் நன்கு சுத்தமாக கழுவிய பிறகு பயன்படுத்துங்கள்.