Just In
- 6 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 7 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 10 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 11 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
Don't Miss
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இனிப்பின் மீதுள்ள தீவிரமான ஆவலை கட்டுப்படுத்த சில டிப்ஸ்...
தாழ்மையான உணர்வுகள் மேலோங்கும் போதும், எதிலுமே நாட்டமில்லாமல் இருக்கும் போதும் இனிப்பு பண்டங்களின் மீது உங்களுக்கு தீராத ஆவல் ஏற்படுவதுண்டு. சர்க்கரையும் பிற இனிப்பு வகைகளும் உங்கள் ஆற்றல் திறனை ஊக்குவிக்கும் பொருட்களாக விளங்குகிறது. இவ்வகை ஆவல் நாம் எதிர்பார்க்காத போது எப்போது வேண்டுமானாலும் எந்த இடத்தில் வேண்டுமானாலும் ஏற்படலாம். சில நேரங்களில் சாக்லேட் மற்றும் ஐஸ்-க்ரீம்களை தேடி பிரிட்ஜ்களில் நம் வேட்டை தொடருவதை நம்மால் கட்டுப்படுத்தவே முடியாமல் கூட போகும். அந்த அளவிற்கு நம் ஆவல் எல்லை மீறி போகும்.
இனிப்பு பண்டங்களுக்காக நாம் ஏங்குவதும், கிடைத்த இனிப்பு பொருட்களை மலைவிழுங்கி பாம்புகளை போல் விழுங்குவதும் நம் உடல்நலத்தை வெகுவாக பாதிக்கும். அது உங்கள் உடலில் அளவுக்கு மிஞ்சிய கொழுப்புகளை அதிகரிக்கச் செய்து விடும். சர்க்கரை என்ற கார்போஹைட்ரேட் உங்கள் உடலில் உடைந்து செரோடோனின் என்ற சந்தோஷ ஹார்மோனை சுரக்க வைக்கும். அதனால் உங்கள் ஆற்றல் திறன் அதிகரித்து, உங்கள் மன அழுத்தம் நீங்கி உங்களை சந்தோஷமாக இருக்கச் செய்யும். உங்கள் உடல் உங்களை இனிப்பு பண்டங்களை உண்ண தூண்டினால், உங்கள் உடலில் சர்க்கரை அளவு குறைந்து கொண்டு வருகிறது என்றும் அது மீண்டும் நிறைய வேண்டும் என்றும் இயற்கை முறையில் உங்களுக்கு வெளிப்படுத்தும் தகவலாகும்.
ஆனால் சர்க்கரை கலந்த பண்டங்களை அளவுக்கு அதிகமாக உண்ணும் போது, மேலும் மேலும் அவைகளை உண்ண வேண்டும் என்ற ஆவல் பிறப்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? அதனால் உங்கள் பசியை ஆற்றி உங்கள் ஆற்றல் திறனை அதிகரிக்கும் ஆற்றலை கொண்டுள்ளது இது. இருந்தாலும் கூட மேலும் மேலும் இனிப்புகளை அது உண்ண தூண்டி கொண்டே இருக்கும். இவ்வகை உணவுகள் இரத்தக் குழாய்களுக்குள் செல்லும் போது, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அது அதிகரிக்கச் செய்யும். அதன் விளைவாக மெதுவாக ஹார்மோன் இன்சுலின் சுரக்க ஆரம்பிக்கும். அதனால் சர்க்கரையானது, இரத்த குழாய்களில் இருந்து அணுக்களுக்குள் செல்ல கட்டாயப்படுத்தப்படும். இன்சுலின் அளவு துரதிஷ்டவசமாக அதிகரிக்கும் போது உங்கள் அணுக்கள் உணர்ச்சிவயப்பட்டு சர்க்கரை நோய், இதய நோய் போன்றவைகளை உண்டாக்கி விடும்.
ஆனால் சர்க்கரைக்கு அடிமையாவதை எப்படி தடுப்பது? சர்க்கரையின் மேல் ஏற்படும் தீவிரமான ஆவலை போக்க கம்மியாக உண்ண வேண்டும் என்று ஊட்டச்சத்து வல்லுனர்கள் பலர் அறிவுறுத்துகிறார்கள். இருப்பினும் இனிப்பு பண்டங்களை தவிர்க்கவும் அதனை தினசரி உண்ணுவதால் ஏற்படும் ஆபத்துக்களை பற்றி தெரிந்து கொள்ளவும், இதோ உங்களுக்காக சில டிப்ஸ்: