ராஷ்ட்ரபதி பவனில் குடியரசு தலைவரின் கையில் பத்மஸ்ரீ விருதைப் பெற நடிகை வித்யா பாலன் மிகவும் அழகாகவும், மங்களகரமாகவும் சென்றிருந்தார். இதுவரை வித்யா பாலன் மேற்கொண்ட ஸ்டைலிலேயே இந்த முறை மேற்கொண்டது தான் அழகாக இருந்தது. இங்கு வித்யா பாலன் பத்மஸ்ரீ விருதைப் பெறும் போது மேற்கொண்ட ஸ்டைல் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளளது.
மஞ்சள் நிற புடவையில் வித்யா பாலன்
ராஷ்ட்ரபதி பவனில் பத்மஸ்ரீ விருதைப் பெறும் போது, நடிகை வித்யா பாலன் மங்களகரமான நிறமான மஞ்சள் நிற பட்டுப் புடவையில் வந்திருந்தார்.
வித்யாவின் மேக் அப்
வித்யா பாலன் ரோஸ் பவுடர் அதிகம் போட்டு, உதடுகளுக்கு பிங்க் நிற லிப்ஸ்டிக் போட்டு, சிவப்பு நிற வட்ட பொட்டு வைத்து, முற்றிலும் தென்னிந்திய ஸ்டைலைப் பின்பற்றி இருந்தார்.
இந்தியன் ஸ்டைல் கம்மல்
வித்யா பாலன் புடவைக்கு பொருத்தமாக காதுகளுக்கு மிகப்பெரிய ஜமிக்கி போட்டு பாரம்பரிய தோற்றத்தில் வந்திருந்தார்.
அழகான நெக்லேஸ்
வித்யா பாலன் மிகவும் அட்டகாசமான கோல்டன் நெக்லேஸ் போட்டு சூப்பராக வந்திருந்தார்.
சிம்பிள் ஹேர் ஸ்டைல்
வித்யா பாலன் புடவைக்கு ஏற்றவாறு தென்னிந்திய ஹேர் ஸ்டைலான கொண்டையைப் போட்டு, நறுமணமிக்க மல்லிகைப்பூ வைத்து வந்திருந்தார்.
கமலுடன் வித்யா பாலன்
இது பத்மஸ்ரீ கமலஹாசனுடன் பத்மஸ்ரீ விருதைப் பெறப் போகும் வித்யா பாலன் சேர்ந்த கொடுத்த போஸ்.
கமலஹாசன்
உலக நாயகனான பத்மஸ்ரீ கமலஹாசன் ராஷ்ட்பதி பவனில் நடந்த பத்மஸ்ரீ விருது நிகழ்ச்சிக்கு கருப்பு நிற ஃபார்மல் சூட்டில் வந்திருந்தார்.