Just In
- 1 hr ago இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- 1 hr ago உங்களுக்கான அதிர்ஷ்ட மோதிரம் எது தெரியுமா? தங்கமா, வெள்ளியா?
- 2 hrs ago ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- 3 hrs ago 11 வயது சிறுமியை அம்மாவும்-மகனும் சேர்ந்து கடத்திய வினோதம்... எதுக்காக கடத்துனாங்க தெரியுமா?
Don't Miss
- Technology 75 நாளுக்கு ஒரே ரீசார்ஜ்.. தினசரி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை.. ரூ.500 விலைக்குள் எந்த திட்டம்?
- Movies கில்லி படத்தில் வரும் விஜய்யின் வீடு எங்க இருக்கு தெரியுமா? செய்யாறு பாலு சொன்ன சுவாரசியத் தகவல்!
- News கரன்ட் இல்லாத நேரங்களிலும் இயங்குவதுதான் இன்வெர்ட்டர் ஏசியா?
- Sports வன்மத்தை கக்கிட்டாரு.. தோனியை வம்புக்கு இழுத்த கவுதம் கம்பீர்.. கொந்தளிக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்!
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Finance டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ-வுக்கு நேரம் சரியில்லை.. ஐடி ஊழியர்களே உஷார்..!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
முகத்தில் பருக்கள் வராமல் இருக்க தவறாமல் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்!
இங்கு முகத்தில் பருக்கள் வராமல் இருக்க தவறாமல் பின்பற்ற வேண்டிய விஷயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
முகத்தில் உள்ள ஓரிரு பருக்களை மேக்கப் மூலம் மறைத்துக் கொள்ளலாம். ஆனால் முகத்தில் பருக்கள் அதிகமான அளவில் இருந்தால், அதை முற்றிலும் மறைக்க முடியாது. முகத்தில் பருக்கள் அதிகம் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று நமது ஒருசில தவறான பழக்கவழக்கங்கள் தான்.
அப்பழக்கங்களை மாற்றி, பருக்களை வரவிடாமல் செய்யும் பழக்கங்களைக் கொண்டால், முக அழகைப் பாதுகாக்கலாம். சரி, இப்போது முகத்தில் பருக்கள் வராமல் இருக்க பின்பற்ற வேண்டிய சில விஷயங்களைக் காண்போம்.
செயல் #1
முகத்தை ஒரு நாளைக்கு 2 முறை மைல்டு கிளின்சர் பயன்படுத்தி வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். முக்கியமாக கிளின்சர் பயன்படுத்தும் போது, அளவுக்கு அதிகமாக தேய்க்க வேண்டாம்.
செயல் #2
சிலர் முகத்தில் உள்ள பருக்களை கையால் பிய்த்து எறிவார்கள். ஆனால் இப்படி பிய்த்து எறிவதன் மூலம், பருக்கள் இருந்த இடம் காயம் ஆவதோடு, நிலைமை இன்னும் மோசமாகக்கூடும். எனவே பருக்கள் அதிகம் இருக்கும் போது, பென்சோயின் பெராக்ஸைடு அல்லது சாலிசிலிக் அமிலம் கொண்டு முகத்தைக் கழுவுங்கள். இதனால் சருமத்தின் pH அளவு நிலையாக இருக்கும்.
செயல் #3
சூரியனிடமிருந்து சருமத்தைப் பாதுகாக்கவும். அதற்கு அடிக்கடி சருமத்திற்கு மாஸ்க் போடுவதோடு, வெளியே செல்லும் முன் சன் ஸ்க்ரீன் லோசனைத் தடவ வேண்டும்.
செயல் #4
உடற்பயிற்சி செய்த பின் முகத்தை நீரால் கழுவ வேண்டும். ஏனெனில் வியர்வை சருமத் துளைகளை அடைத்து முகப்பருவின் நிலைமையை இன்னும் மோசமாக்கும். எனவே எப்போதும் வெளியே சென்று வீட்டிற்கு வந்த பின், வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
செயல் #5
தலைக்கு ஹேர் ஸ்ப்ரே அல்லது ஹேர் ஜெல்லைப் பயன்படுத்தினால், தலைமுடி முகத்தில் விழாதவாறு பார்த்துக் கொள்ளவும். பெரும்பாலான தலைமுடி பராமரிப்பு பொருட்களில் எண்ணெய் அதிகம் உள்ளது. இது பருக்களை மோசமாக்கும்.
செயல் #6
உங்களுக்கு மார்பு அல்லது முதுகுப் பகுதிகளில் பருக்கள் அதிகம் இருந்தால், இறுக்கமான உடைகளை அணிவதைத் தவிர்த்திடுங்கள். ஏணெனில் இது அரிப்பையும், எரிச்சலையும் உண்டாக்கும்.