Just In
- 6 min ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 2 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 2 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 3 hrs ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- Sports மச்சக்காரன்யா நீ.. ஒரு போட்டிக்கு 3 கோடி சம்பளம்! ஒரு விக்கெட்டுக்கு 2.4 கோடி.. தீபக் சாஹரின் யோகம்
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
இவைகள் தான் முகத்தில் பருக்கள் அதிகமாவதற்கு காரணம் என்பது தெரியுமா?
இங்கு முகத்தில் பருக்கள் அதிகமாவதற்கான காரணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
சிலருக்கு முகத்தில் பருக்கள் அதிகமாக இருக்கும். ஒருவரது முகத்தில் பருக்கள் வருவதற்கு சருமத்தை சரியாக சுத்தம் செய்யாமல் இருப்பது அல்லது பால் பொருட்களை அதிகம் உட்கொள்வது போன்றவைகள் முக்கிய காரணங்களாகும்.
எனவே உங்கள் முகத்தில் பருக்கள் வராமல் இருக்க வேண்டுமானால், ஒருசில பழக்கங்களைத் தவிர்த்திடுங்கள். அந்த பழக்கங்களைத் தவிர்த்தாலே பருக்கள் வருவதைத் தடுக்கலாம். சரி, இப்போது முகத்தில் பருக்கள் அதிகமாக இருப்பதற்கு காரணமாக இருக்கும் பழக்கங்கள் குறித்து காண்போம்.
பழக்கம் #1
முகத்தை சரியாக சுத்தம் செய்யாமல் இருந்தால், பருக்கள் வரும். எனவே ஒரு நாளைக்கு 2 முறை நல்ல கிளின்சர் பயன்படுத்தி முகத்தைக் கழுவ வேண்டியது அவசியம். அதற்காக நல்ல வாசனையாக உள்ளது என்று கெமிக்கல் நிறைந்த கிளின்சர்களைப் பயன்படுத்தாதீர்கள். இல்லாவிட்டால், முகத்தில் உள்ள சிறு பருவும் பெரிதாகி பரவ ஆரம்பித்துவிடும்.
பழக்கம் #2
அன்றாடம் பால் பொருட்களை அதிகம் உட்கொள்வதாலும் பருக்கள் வரும். இதற்கு பால் பொருட்களில் உள்ள இன்சுலின் தான் காரணம். உடலில் இன்சுலின் அளவு அதிகரிக்கும் போது, சருமத்தில் எண்ணெய் பசையின் சுரப்பும் அதிகரித்து, சருமத்துளைகளில் அடைப்பு ஏற்பட்டு, பருக்களை அதிகம் வரவழைக்கும்.
பழக்கம் #3
நாம் அன்றாடம் பயன்படுத்தும் மொபைல் போன்களும் பருக்கள் வருவதற்கு முக்கிய காரணமாகும். எப்படியெனில், மொபைலை கண்ட இடத்தில் வைப்பதோடு, அழுக்கான கைகளால் மொபைல் போனை உபயோகித்து, அதையே முகத்தின் அருகில் வைத்து பேசும் போது, சருமத்தில் பாக்டீரியாக்களின் அளவு அதிகரித்து, சருமத் துளைகளை பாதித்து பிம்பிளை உண்டாக்கும்.
பழக்கம் #4
பலரும் கை, கால்களுக்கு பயன்படுத்தும் க்ரீம்களை முகத்திற்கும் பயன்படுத்துவார்கள். இப்படி பயன்படுத்தினாலும் பருக்கள் வரும். சொல்லப்போனால், கை, கால்களுக்கு பயன்படுத்தும் லோசன்களில் எண்ணெய் பசை சற்று அதிகமாக இருக்கும். இதை முகத்திற்கு பயன்படுத்தும் போது, சருமத்துளைகளில் அடைப்புக்கள் ஏற்பட்டு பருக்கள் வரும்.
பழக்கம் #5
சர்க்கரை நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொண்டால், அது சரும ஆரோக்கியத்தைப் பாதிக்கும். ஏனெனில் சர்க்கரை உணவுகளில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் இருப்பதால், அவை பருக்களை உண்டாக்கும். ஆகவே சர்க்கரை, கார்போஹைட்ரேட் மற்றும் ஸ்டார்ச் நிறைந்த உணவுகளை அளவாக சாப்பிட்டு, பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சாப்பிடுங்கள்.