Just In
- 2 hrs ago Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- 7 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- 8 hrs ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- 9 hrs ago Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
Don't Miss
- Sports IPL 2024 DC vs GT: நாடி நரம்பு எல்லாம் தோனி.. உண்மையை போட்டு உடைத்த ரிஷப் பண்ட்
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- News தோசைக்கு ஏன் ‛தோசை’னு பெயர் வந்தது தெரியுமா? அட இவ்வளவு நாள் தெரியாம போச்சே! சுவாரசியம்
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கை கால் முட்டிகளில் அசிங்கமாக இருக்கும் கருமை மற்றும் சொரசொரப்பை நீக்கும் புதிய வழிகள்!!
கை கால் முட்டிகளில் காணப்படும் கருமையையும், சொரசொரப்பையும், நீக்கி, மிருதுத்தன்மையை கொடுக்கும் புதிய வழிகளை இங்கே சொல்லப்பட்டிருக்கிறது.
கைகால்களில் உள்ள சொரசொரப்பு அழகை கெடுக்கும் விதமாக இருக்கும். இறந்த செல்களின் தேக்கம்தான் அந்த இடங்களில் கடினமான தோலை கொடுத்துவிடுகிறது. அங்கே அழுக்குகள் மேலும் சேர்ந்து பார்க்கவே அழகற்றதாக்கிவிடுகிறது.
நேரமில்லையென்றாலும் தினமும் குறைந்த பட்சம் குளிக்கும்போது முட்டிகளில் தேய்த்து குளிக்கவேண்டும்,. அதோடு வாரம் ஒருமுறை அல்லது இருமுறை கீழ்கண்ட குறிப்புகளை பயன்படுத்தினால் வெகுவிரைவில் முட்டிகள் மென்மை பெற்று மிருதுவாகும்.
கற்பூரம் மற்றும் தேங்காய் எண்ணெய் :
தேங்காய் எண்ணெயில் கற்பூரத்தைப் போட்டு, அந்த எண்ணெயைக் கொண்டு முழங்கை மற்றும் முழங்கால்களில் தடவி வர, அப்பகுதிகளில் உள்ள கருமை விரைவில் அகலும்.
சர்க்கரை மற்றும் ஆலிவ் ஆயிலை சரிசம அளவில் எடுத்து ஒன்றாக கலந்து, அக்கலவையைக் கொண்டு முழங்கை மற்றும் முழங்கால்களில் தடவி மென்மையாக வட்ட சுழற்சியில் மசாஜ் செய்து, சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும்.
கற்றாழை :
கற்றாழை ஜெல்லை தினமும் கருமையாக உள்ள முழங்கை மற்றும் முழங்காலில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை என தினமும் பின்பற்றி வந்தால், விரைவில் கருமையைப் போக்கலாம்.
கடலை மாவு மற்றும் எலுமிச்சை
2 டேபிள் ஸ்பூன் கடலை மாவுடன், சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, கருமையாக உள்ள முழங்கை மற்றும் முழங்காலில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி செய்வதால் எலுமிச்சையில் உள்ள ப்ளீச்சிங் தன்மை கருமையை எளிதில் போக்கும் மற்றும் கடலை மாவு இறந்த செல்களை வெளியேற்றும்.
சமையல் சோடா :
பேக்கிங் சோடாவைக் கொண்டு ஸ்கரப் செய்தால், இறந்த செல்கள் முழுமையாக வெளியேறி, கருமை மெதுவாக மறைய ஆரம்பிக்கும். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவில் பால் சேர்த்து பேஸ்ட் செய்து, அதனை முழங்கை மற்றும் முழங்கால்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ, இன்னும் நல்ல பலன் கிடைக்கும்.
தயிர் மற்றும் வினிகர் :
தயிர் மற்றும் வினிகரை சரிசம அளவில் ஒன்றாக கலந்து, முழங்கை மற்றும் முழங்கால்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ, இன்னும் நல்ல பலன் கிடைக்கும்.
புதினா :
புதினா மற்றொரு பிரபலமான முழங்கை மற்றும் முழங்கால்களில் உள்ள கருமையைப் போக்க உதவும் பொருள். மேலும் புதினாவில் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை இருப்பதால், அது இறந்த செல்களை முற்றிலும் வெளியேற்றி, முழங்கை மற்றும் முழங்கால்களின் நிறத்தை அதிகரிக்கச் செய்யும்.