Just In
- 1 min ago Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- 41 min ago சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- 58 min ago புடவை கட்டினால் புற்றுநோய் வருகிறதாம்.. ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்..!
- 2 hrs ago வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
Don't Miss
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- News ஆந்திரா தேர்தல்: சிஎம் ஜெகன் அண்ணாவை அலறவிடும் இன்னொரு தங்கை! காங்கிரஸ் ஷர்மிளாவுடன் கை கோர்த்தார்!
- Movies ஹீரோ மாதிரி இருக்கும் அப்பாஸ் மகன்.. களத்தில் இறங்கிடுவாரோ.. ட்ரெண்டாகும் புகைப்படம்
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
ஏன் தினமும் ஒரு முறைக்கு மேல் முகத்திற்கு சோப்பை பயன்படுத்தக் கூடாது தெரியுமா?
முகத்தை சுத்தம் செய்ய பலரும் பயன்படுத்தும் ஓர் பொதுவான பொருள் தான் சோப்பு. ஆனால் இந்த சோப்பை ஒருவர் அளவுக்கு அதிகமாக முகத்திற்கு பயன்படுத்தக்கூடாது. இதற்கு சோப்பில் சேர்க்கப்பட்டுள்ள கெமிக்கல்கள் சரும செல்களை கடுமையான பாதிப்பிற்கு உள்ளாக்கும்.
மேலும் அனைவருக்குமே அனைத்து சோப்புகளும் பொருந்தும் என்று கூற முடியாது. எனவே ஒவ்வொருவரும் சரியான சோப்புகளை வாங்கி பயன்படுத்த வேண்டியது அவசியம். அதுமட்டுமின்றி அவற்றை ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
அப்படியெனில் முகத்தை எப்படி சுத்தம் செய்வது என்று கேட்கலாம். முகத்தை சுத்தம் செய்ய சோப்பு மட்டும் தான் உதவும் என்றில்லை, சில இயற்கை பொருட்களும், ஏன் சரும வகைக்கேற்ப விற்கப்படும் மைல்டு ஃபேஸ் வாஷ்களையும் பயன்படுத்தலாம்.
இங்கு ஏன் தினமும் ஒரு முறைக்கு மேல் முகத்திற்கு சோப்பை பயன்படுத்தக் கூடாது என்பதற்கான சில காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
சரும செல்கள் பாதிப்பு
சோப்புக்களில் உள்ள மோசமான கெமிக்கல்கள், சரும செல்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். சரும செல்கள் பாதிப்பிற்குள்ளானால், அதனால் முக அழகு பாதிப்பிற்குள்ளாகும். ஆகவே சோப்பை அதிகமாக முகத்திற்குப் பயன்படுத்தாதீர்கள்.
சரும வறட்சி
சோப்புக்களை அதிகமாக முகத்திற்கு பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள நேச்சுரல் எண்ணெய் முழுமையாக வெளியேற்றப்பட்டு, சருமம் மிகுந்த வறட்சிக்குள்ளாகும்.
கொழுப்பு அமிலங்கள் நீங்கும்
சோப்புக்கள் சருமத்திற்கு பாதுகாப்பளிக்கும் கொழுப்பு அமிலங்களை முழுமையாக வெளியேற்றி, அதனால் பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகளை எதிர்த்துப் போராடும் தன்மையைக் குறைத்துவிடும். இதனால் அதிக சரும பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்.
முகப்பரு
சோப்புக்கள் சருமத்தில் இருக்கும் கொழுப்பு அமிலங்களை வெளியேற்றி, பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகளின் தாக்கத்தை அதிகரித்து, அதன் காரணமாக முகப்பரு அடிக்கடி வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.
வைட்டமின்கள் வெளியேறும்
சோப்புக்களை அதிகமாக முகத்திற்கு பயன்படுத்தினால், அதனால் சருமத்தில் உள்ள அத்தியாவசிய வைட்டமின்கள் வெளியேற்றப்பட்டு, அதனால் சரும பொலிவும், ஆரோக்கியமும் குறைந்துவிடும்.
pH அளவு பாதிக்கப்படும்
சோப்புக்களில் உள்ள கெமிக்கல்கள், சருமத்தின் ஈரப்பசையைக் குறைப்பதோடு, சருமத்தின் pH அளவை பாதித்து, அதனால் பல பிரச்சனைகள் வர வழிவகுக்கும்.
சருமத்துளைகள் அடைக்கப்படும்
நிறைய சோப்புக்களில் ஃபேட்டி அமிலங்கள் அதிகமாக உள்ளது. இவை சருமத்துளைகளில் தேங்கி அடைப்பை ஏற்படுத்தி, அதனால் முகப்பரு பிரச்சனையை மேன்மேலும் அதிகரிக்கும்.