Just In
- 2 hrs ago நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- 2 hrs ago குழந்தையின்மைக்கு இந்த பிரச்சனைகள் எல்லாம் காரணமாக இருக்கலாம்.. கவனியுங்கள்..!
- 3 hrs ago புதன் மீன ராசிக்கு நேராக செல்வதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழக்கையில் அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்...!
- 4 hrs ago உங்கள் தலைமுடி வலுவாக வளரனுமா? அப்போ இதை சாப்பிடுங்கள்..!
Don't Miss
- Finance பெங்களூரு தண்ணீர் பிரச்னையை தீர்க்க ஜல்மித்ரா திட்டம்..!
- Sports என்ன வீடியோ கேம் விளையாடுறாங்க.. 11 சிக்ஸ், 13 ஃபோர்ஸ்.. 5 ஓவர்களில் சதம்.. வரலாறு படைத்த ஐதராபாத்!
- Movies Thalaivar171: டைட்டில் ரிலீசுக்கு இன்னும் இரு தினம்.. மீண்டும் கடிகாரத்தை கையிலெடுத்த சன் பிக்சர்ஸ்!
- News 24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம்
- Automobiles ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
கண்களில் உள்ள கருவளையம் எப்படி சுலபமாய் போக்குவது?
கருவளையம் ஏன் வருகிறது?
கண்களில் ரத்த ஓட்டமில்லாமல் இருக்கும்போது, அங்கே கருவளையம் ஏற்படும். உடலில் சூடு அதிகமாவதுடன், கண்களும் எளிதில் சோர்வடைகின்றன. உடல் சூடானது சோர்வடைந்த கண்கள் மூலம் தொடர்ச்சியாக வெளிப்படுவதால் கண்களை சுற்றி கருவளையம் தோன்றுகிறது.
அதிக நேரம் சக்தி வாய்ந்த வெளிச்சத்தை பார்த்துக் கொண்டிருந்தாலும், போதிய தூக்கமில்லாமலிருந்தாலும் கருவளையம் ஏற்படும்.
கருவளையம் எப்படி சரி செய்யலாம் :
எலுமிச்சம்பழச் சாறுடன் துளசிச் சாறு சம அளவு சேர்த்து கண்களை சுற்றி தடவி வந்தால் நாளடைவில் கருவளையம் மறைந்துவிடும்.
தேன், வாழைப்பழம், முட்டை வெண்கரு இவற்றை சம அளவு எடுத்து நன்றாக அரைத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து பின் குளித்து வர கருவளையம் நீங்குவதோடு மட்டுமல்லாமல் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறையும்.
விளக்கெண்ணெய் தேங்காய் எண்ணெயுடன் சம அளவு கலந்து கண்களை சுற்றி தடவி வந்தால் கருவளையம் போய்விடும். பாலாடையை கண்களை சுற்றி போட்டு வர கருவளையம் சீக்கிரத்தில் மாறும்.
காரட் சாறு, தக்காளி பழச்சாறு இவற்றில் ஏதாவது ஒன்றை தினமும் தடவி வந்தால் கருவளையம் மறைந்துவிடும்.
பப்பாளி பழத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, பின் அரைத்து அதனுடன் சிறிது மஞ்சள் சேர்த்து கலந்து பூசி வர கருவளையம் மறைந்துவிடும்
பாதாம் எண்ணெயை பூசி வந்தால், கண்கள் தெளிவு பெற்று கண்களில் உள்ள கருவளையம் மறைந்து அழகாக காட்சி அளிக்கும்.
வெள்ளரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி, கண்களின் மீது வைக்கவும். இதனால் கண்களில் சூடு குறைந்து குளிர்ச்சி உண்டாவதுடன் கண்ணை சுற்றியுள்ள கருவளையம் நீங்கும்.
பச்சை உருளைக்கிழங்கை சாறெடுத்து அதனை கண்களில் தடவி காய்ந்ததும் கழுவவும். தினமும் இவ்வாறு செய்துவந்தால் அடர்ந்த கருவளையம் கூட போய்விடும்.