Just In
- 20 min ago உங்கள் தலைமுடி வலுவாக வளரனுமா? அப்போ இதை சாப்பிடுங்கள்..!
- 23 min ago ஜாகிங் போகும் போது இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க... இல்லனா உங்க எலும்புகள் அவ்வளவுதான்...!
- 2 hrs ago இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- 3 hrs ago உங்களுக்கான அதிர்ஷ்ட மோதிரம் எது தெரியுமா? தங்கமா, வெள்ளியா?
Don't Miss
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
- Sports IPL 2024 : சிஎஸ்கே கேப்டனுக்கு கல்தா.. பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு.. சுப்மன் கில் வைத்த ட்விஸ்ட்
- News சம்மருக்கு டிராவல் பண்றவங்களுக்கு நோ பிராப்ளம்.. சூப்பர் பிளானை கையில் எடுத்த ரயில்வே! இத பாருங்க
- Movies எரிகிற கொள்ளியில் இன்னும் ஏன் எண்ணெய் ஊத்துற.. விஜய்யை கடுமையாக விமர்சித்த பயில்வான் ரங்கநாதன்!
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- Technology இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
வெளியே சுற்றிவிட்டு வீட்டிற்கு வந்ததும் முகம் பிசுபிசுன்னு இருக்கா? அதைப் போக்க இதோ சில டிப்ஸ்...
என்ன தான் கோடைக்காலத்தை கடந்துவிட்டாலும், மாலையில் தாங்க முடியாத அளவில் மிகுந்த வெப்பத்தை உணர நேரிடுகிறது. மேலும் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்ததும், முகத்தில் எண்ணெய் வழிந்து சருமம் பிசுபிசுவென்று அசிங்கமாக இருக்கும். இந்த நிலையைப் போக்க சோப்பு அல்லது ஃபேஸ் வாஷைப் பயன்படுத்தி முகத்தைக் கழுவலாம்.
ஆனால் பொலிவிழந்திருக்கும் முகத்தை புத்துணர்ச்சியுடன் வெளிக்காட்ட முடியாது. அதற்கு ஒருசில ஃபேஸ் பேக்குகள் தான் உதவும். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை பிசுபிசுவென்று இருக்கும் முகத்தை பொலிவோடு வெளிக்காட்ட உதவும் ஃபேஸ் பேக்குகளைக் கொடுத்துள்ளது. அதைப் படித்து பின்பற்றி அழகை மெருகேற்றிக் கொள்ளுங்கள்.
சீமைச்சாமந்தி டீ
சீமைச்சாமந்தியில் ஏராளமான சக்திவாய்ந்த உட்பொருட்கள் உள்ளன. இந்த சீமைச்சாமந்தியைக் கொண்டு டீ தயாரித்து, அத்துடன் ஓட்ஸ் பொடி, சிறிது பாதாம் எண்ணெய் மற்றும் தேன் கலந்து, முகத்தில் தடவி 10-15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.
கிவி
ஒரு கிவி பழத்தை எடுத்து அதன் தோலை நீக்கிவிட்டு, கனிந்த பகுதியை மசித்து, அத்துடன் 2 டீஸ்பூன் சர்க்கரை மற்றும் 2 துளிகள் சூரியகாந்தி எண்ணெய் சேர்த்து கலந்து, முகம், கை, கால் மற்றும் கழுத்தில் தடவி 2 நிமிடம் தேய்த்து, பின் கழுவ வேண்டும்.
சோள மாவு
சோள மாவு சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சும். அத்தகைய சோள மாவை ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து, அத்துடன் சிறிது ஆலிவ் ஆயில் கலந்து, முகத்தில் தடவி, நன்கு உலர்ந்த பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
பட்டை மற்றும் ஜாதிக்காய்
1 டீஸ்பூன் பட்டை பொடியுடன், 1 டீஸ்பூன் ஜாதிக்காய் பொடி மற்றும் 2 டீஸ்பூன் தேன் கலந்து, முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்தால் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை வெளியேறி, முகம் பொலிவாகும்.
அவகேடோ
ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை நன்கு அடித்து, அத்துடன் அவகேடோ பழத்தை மசித்து சேர்த்து, அதோடு 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20-25 நிமிடம் கழித்துக் கழுவ வேண்டும். இதனால் அதிகப்படியான எண்ணெய் பசை நீங்குவதோடு, பருக்களும், முதுமைக் கோடுகளும், சுருக்கங்களும் மறையும்.