Just In
- 46 min ago கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- 1 hr ago ஹிட்லரின் நாஜி முகாமில் நடத்தப்பட்ட திகிலூட்டும் சோதனைகள் என்னென்ன தெரியுமா? முக்கியமா இரட்டை குழந்தைகள் மீது!
- 3 hrs ago Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- 3 hrs ago 300 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் அவங்க ஆட்சியில் இந்தியாவின் எந்தெந்த விஷயங்களை மாற்றினார்கள் தெரியுமா?
Don't Miss
- Movies பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
- News அடேங்கப்பா.. நம்ப முடியாத வகையில் இந்தியாவின் உள்கட்டமைப்பு! மோடியை பாராட்டிய அமெரிக்க வங்கி சிஇஓ
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வெள்ள நீரினால் சரும நோய்கள் வராமல் இருக்க பெட்ரோலியம் ஜெல்லி யூஸ் பண்ணுங்க...
வேஸ்லின் என்று பலராலும் அறிப்பட்ட பெட்ரோலியம் ஜெல்லி பலவாறு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் தற்போது கனமழையால் முழங்கால் அளவில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தண்ணீர் உள்ளது. அதிலும் இந்த நீரில் வெறும் மழை நீர் மட்டுமின்றி, சாக்கடை நீர் மற்றும் இதர கழிவு நீரும் கலக்கப்பட்டுள்ளதால், பல்வேறு நச்சுமிக்க மோசமான கிருமிகள் நம்மை தாக்க தயாராக இருக்கும்.
குறிப்பாக இந்த நீரால் முதலில் நம் சருமம் தான் அதிக அளவில் பாதிப்பிற்குள்ளாகும். எனவே எக்காலத்திலும் நம் சருமத்திற்கு போதிய பாதுகாப்பை வழங்க வேண்டியது அவசியம். இந்த பாதுகாப்பை பெட்ரோலியம் ஜெல்லி வழங்கும். ஏனெனில் இது மிகவும் அடர்த்தியானது என்பதால், சருமத்திற்கு மேல் ஓர் படலத்தை உருவாக்கிவிடும்.
இங்கு வேஸ்லின் என்னும் பெட்ரோலியம் ஜெல்லியைக் கொண்டு நம் சருமத்தைப் பராமரித்தால் பெறும் நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
சேற்றுப்புண்
நீரில் அதிக நேரம் இருந்தால், அதனால் கால்களில் சேற்றுப்புண் வரும். அதிலும் தற்போது முழங்கால் அளவில் நீர் என்பதால், கைகள் மற்றும் கால்களுக்கு தவறாமல் பெட்ரோலியம் ஜெல்லியைத் தடவிக் கொண்டு செல்லுங்கள். இதனால் நீரினால் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
வறட்சி நீங்கும்
பெட்ரோலியம் ஜெல்லியை கை, கால்களுக்கு தடவிக் கொண்டால், அதனால் சருமத்தில் ஏற்படும் வறட்சி நீங்கும்.
காயங்கள் குணமாகும்
உங்கள் சருமத்தில் காயங்கள் ஏதேனும் இருந்தால், அவ்விடத்தில் பெட்ரோலியம் ஜெல்லியைத் தடவிக் கொள்ளுங்கள். இதனால் அவ்விடத்தில் வறட்சி ஏற்படுவது தடுக்கப்பட்டு, விரைவில் காயங்களும் குணமாகும்.
சரும அரிப்புக்கள்
கைக் குழந்தைகள் வைத்திருப்பவர்கள், குழந்தைகளுக்கு டயப்பர் அணிவிக்கும் முன், அவர்களுக்கு பெட்ரோலியம் ஜெல்லியை தடவி விட்டால், டயப்பர் மூலம் ஏற்படும் அரிப்புக்களைத் தடுக்கலாம். வெள்ள நீரில் இறங்கும் முன் கை, கால்களுக்கு பெட்ரோலியம் ஜெல்லியைத் தடவிக் கொண்டால், கடுமையான நுண்கிருமிகளால் சருமத்தில் சொறி, சிரங்கு ஏற்படுவதைத் தடுக்கலாம்.
தழும்புகள் மறையும்
உங்கள் உடலில் தழும்புகள் இருந்தால், அந்த தழும்புகளை மறைக்க பெட்ரோலியம் ஜெல்லி உதவும். அதற்கு தினமும் பெட்ரோலியம் ஜெல்லியை தழும்புகள் உள்ள இடத்தில் தடவி வர வேண்டும்.