Just In
- 49 min ago கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- 2 hrs ago கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- 3 hrs ago கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- 3 hrs ago ஹிட்லரின் நாஜி முகாமில் நடத்தப்பட்ட திகிலூட்டும் சோதனைகள் என்னென்ன தெரியுமா? முக்கியமா இரட்டை குழந்தைகள் மீது!
Don't Miss
- News இலங்கையில் ரூ7,500 கோடி மதிப்பிலான 802 கிலோ எடை ரத்தினக் கல்- உலகிலேயே மிகப் பெரியது!
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.10,999 போதும்.. 50எம்பி கேமரா.. புதிய Realme 5ஜி போன்கள் அறிமுகம்.. எந்த மாடல்?
- Automobiles நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- Finance சிங்கப்பூர் அடுத்து ஐரோப்பா கொடுத்த ஷாக்.. அச்சுறுத்தும் எத்திலீன் ஆக்சைடு கெமிக்கல்..!!
- Movies அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கான சில சூப்பரான ஃபேஸ் மாஸ்க்குகள்!!!
இருப்பதிலேயே எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் தான் பல்வேறு சரும பிரச்சனைகளுக்கு உள்ளாவார்கள். மேலும் அவர்களின் முகத்தைப் பார்த்தால், பருக்கள் மற்றும் அதனால் வந்த கருமையான தழும்புகள், கரும்புள்ளிகள் போன்றவை இருக்கும். இத்தகையவற்றை போக்க பலர் பல்வேறு க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள். இருப்பினும் சருமத்தில் இருந்து வெளிவரும் எண்ணெய் பசையின் அளவு குறைந்திருக்காது.
அதுமட்டுமல்லாமல் அவர்களின் முகமே அந்த க்ரீமால் பாழாகியிருக்கும். எனவே எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்தது இயற்கைப் பொருட்களைக் கொண்டு முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க் போடுவது தான். அதுமட்டுமின்றி, இந்த மாஸ்க்கை வாரம் இரண்டு முறை பின்பற்றுவதுடன், வெளியில் சென்று வீட்டிற்கு வந்ததும் முகத்தை ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், அதிகப்படியான எண்ணெய் வெளிவருவதைக் கட்டுப்படுத்தி, முகத்தை பொலிவோடு பிரச்சனையின்றி வைத்துக் கொள்ளலாம்.
இங்கு எண்ணெய் பசை சருமத்திற்கான சில ஈஸியான ஃபேஸ் மாஸ்க்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து பார்த்து முயற்சித்துப் பாருங்கள்.
முட்டை மாஸ்க்
ஒரு முட்டையின் வெள்ளைக்கரு, 1 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு, சில துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் 1/2 டீஸ்பூன் க்ளே சேர்த்து கலந்து, கண்களில் படாதவாறு முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். அதிலும் இந்த மாஸ்க்கை வார இறுதியில் மாலை வேளையில் போடுவது நல்லது.
வாழைப்பழ மாஸ்க்
ஒரு பௌலில் 3 டேபிள் ஸ்பூன் வாழைப்பழக் கூழ், 1 டீஸ்பூன் தேன் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து மென்மையாக கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இதனை வாரம் ஒருமுறை போட வேண்டும்.
ஓட்ஸ் மாஸ்க்
3 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடியுடன், 2 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் 1/2 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் முகப்பருவினால் ஏற்பட்ட தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகள் விரைவில் போய்விடும்.
ஸ்ட்ராபெர்ரி மாஸ்க்
8 ஸ்ட்ராபெர்ரி, சில துளிகள் எலுமிச்சை சாறு மற்றம் 1 டேபிள் ஸ்பூன் களிமண் சேர்த்து நன்கு அரைத்து, அதனை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இதனால் சருமத்தில உள்ள இறந்த செல்கள் வெளியேற்றப்படுவதுடன், முகத்தில் உள்ள பருக்களும் போய்விடும்.
க்ரீன் டீ மாஸ்க்
2 டீஸ்பூன் க்ரீன் டீயுடன், 1 டீஸ்பூன் தேன், 2 டீஸ்பூன் களிமண் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை வாரத்திற்கு இரண்டு முறை போட்டால், நல்ல பலன் கிடைக்கும்.
யூகலிப்டஸ் ஆயில் மாஸ்க்
இந்த மாஸ்க்கில் 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில், 1 டீஸ்பூன் தயிர், 1 டீஸ்பூன் களிமண் மற்றும் 2 துளிகள் யூகலிப்டஸ் ஆயில் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனை வாரம் ஒருமுறை செய்து வருவது நல்லது.
ஆரஞ்சு மாஸ்க்
1 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு ஜூஸ் உடன், 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரம் இரண்டு முறை செய்து வந்தால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையானது நீங்கி, சருமம் பொலிவோடு இருக்கும்.
சோள மாவு மாஸ்க்
3 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு சாற்றுடன், 1 டீஸ்பூன் க்ளே மற்றும் 1 டீஸ்பூன் சோள மாவு சேர்த்து கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் உலர வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை வாரம் ஒருமுறை முகத்திற்கு போடுவது நல்லது.
ஓட்ஸ் மற்றும் கேரட் மாஸ்க்
3 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடியுடன், 1 டேபிள் ஸ்பூன் கேரட் ஜூஸ், 1 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் சரும துளைகளில் உள்ள அழுக்குகள் நீக்கப்பட்டு, சருமத்தின் நிறமும் அதிகரித்து காணப்படும்.
தக்காளி மாஸ்க்
அரைத்த தக்காளி ஒன்று, 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 2 டேபிள் ஸ்பூன் க்ளே சேர்த்து ஒன்றாக கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், முகப்பருக்கள் நீங்குவதுடன், சருமத்தில் உள்ள கருமையும் நீங்கும்.