Just In
- 1 hr ago 18 ஆண்டுகளுக்கு பின் நிகழும் ராகு சூரிய சுக்கிர சேர்க்கை: மார்ச் 31 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்..
- 4 hrs ago இட்லி, தோசைக்கு ஒருமுறை இப்படி தக்காளியை குருமாவை செஞ்சு பாருங்க.. அடிக்கடி செய்வீங்க..
- 12 hrs ago கும்ப ராசியில் உதயமாகும் சனி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படப்போகுது..
- 14 hrs ago உங்களுக்கு கொலஸ்ட்ரால் இருக்கா? மறந்தும் இந்த சப்ளிமென்டுகளை எடுக்காதீங்க.. அப்புறம் கஷ்டப்படுவீங்க..
Don't Miss
- News பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடும் 10 தொகுதிகள் எது? சேலத்தில் இவரா? உத்தேச வேட்பாளர்கள் லிஸ்ட் ?
- Finance H-1B விசா: ஐடி ஊழியர்களுக்கு 3 நாளில் குட் நியூஸ்.. பல பேரின் வாழ்க்கை மாறப்போகுது..!!
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Movies Shaitaan Box office: ஜோதிகாவின் ஷைத்தான்.. மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?
- Technology ஆதார் அப்டேட் செய்ய போறீங்களா? தெரியாம கூட இந்த தவறை செய்யாதீர்கள்.. கணக்கு வைக்கும் UIDAI ஆணையம்..
- Sports சர்ஃபராஸ் கான், ஜுரேலுக்கு அடித்த ஜாக்பாட்.. ஆனால் ரிஷப் பண்ட்டுக்கு.. பிசிசிஐ வைத்த ட்விஸ்ட்
- Automobiles கேரளாவில் தவெக தலைவர் விஜய்யை பார்க்க இவ்வளவு கூட்டமா? கேரளாவுல நின்னா வெற்றி கன்ஃபார்ம்!
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கான சில சூப்பரான ஃபேஸ் மாஸ்க்குகள்!!!
இருப்பதிலேயே எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் தான் பல்வேறு சரும பிரச்சனைகளுக்கு உள்ளாவார்கள். மேலும் அவர்களின் முகத்தைப் பார்த்தால், பருக்கள் மற்றும் அதனால் வந்த கருமையான தழும்புகள், கரும்புள்ளிகள் போன்றவை இருக்கும். இத்தகையவற்றை போக்க பலர் பல்வேறு க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள். இருப்பினும் சருமத்தில் இருந்து வெளிவரும் எண்ணெய் பசையின் அளவு குறைந்திருக்காது.
அதுமட்டுமல்லாமல் அவர்களின் முகமே அந்த க்ரீமால் பாழாகியிருக்கும். எனவே எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்தது இயற்கைப் பொருட்களைக் கொண்டு முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க் போடுவது தான். அதுமட்டுமின்றி, இந்த மாஸ்க்கை வாரம் இரண்டு முறை பின்பற்றுவதுடன், வெளியில் சென்று வீட்டிற்கு வந்ததும் முகத்தை ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், அதிகப்படியான எண்ணெய் வெளிவருவதைக் கட்டுப்படுத்தி, முகத்தை பொலிவோடு பிரச்சனையின்றி வைத்துக் கொள்ளலாம்.
இங்கு எண்ணெய் பசை சருமத்திற்கான சில ஈஸியான ஃபேஸ் மாஸ்க்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து பார்த்து முயற்சித்துப் பாருங்கள்.
முட்டை மாஸ்க்
ஒரு முட்டையின் வெள்ளைக்கரு, 1 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு, சில துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் 1/2 டீஸ்பூன் க்ளே சேர்த்து கலந்து, கண்களில் படாதவாறு முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். அதிலும் இந்த மாஸ்க்கை வார இறுதியில் மாலை வேளையில் போடுவது நல்லது.
வாழைப்பழ மாஸ்க்
ஒரு பௌலில் 3 டேபிள் ஸ்பூன் வாழைப்பழக் கூழ், 1 டீஸ்பூன் தேன் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து மென்மையாக கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இதனை வாரம் ஒருமுறை போட வேண்டும்.
ஓட்ஸ் மாஸ்க்
3 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடியுடன், 2 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் 1/2 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் முகப்பருவினால் ஏற்பட்ட தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகள் விரைவில் போய்விடும்.
ஸ்ட்ராபெர்ரி மாஸ்க்
8 ஸ்ட்ராபெர்ரி, சில துளிகள் எலுமிச்சை சாறு மற்றம் 1 டேபிள் ஸ்பூன் களிமண் சேர்த்து நன்கு அரைத்து, அதனை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இதனால் சருமத்தில உள்ள இறந்த செல்கள் வெளியேற்றப்படுவதுடன், முகத்தில் உள்ள பருக்களும் போய்விடும்.
க்ரீன் டீ மாஸ்க்
2 டீஸ்பூன் க்ரீன் டீயுடன், 1 டீஸ்பூன் தேன், 2 டீஸ்பூன் களிமண் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை வாரத்திற்கு இரண்டு முறை போட்டால், நல்ல பலன் கிடைக்கும்.
யூகலிப்டஸ் ஆயில் மாஸ்க்
இந்த மாஸ்க்கில் 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில், 1 டீஸ்பூன் தயிர், 1 டீஸ்பூன் களிமண் மற்றும் 2 துளிகள் யூகலிப்டஸ் ஆயில் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனை வாரம் ஒருமுறை செய்து வருவது நல்லது.
ஆரஞ்சு மாஸ்க்
1 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு ஜூஸ் உடன், 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரம் இரண்டு முறை செய்து வந்தால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையானது நீங்கி, சருமம் பொலிவோடு இருக்கும்.
சோள மாவு மாஸ்க்
3 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு சாற்றுடன், 1 டீஸ்பூன் க்ளே மற்றும் 1 டீஸ்பூன் சோள மாவு சேர்த்து கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் உலர வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை வாரம் ஒருமுறை முகத்திற்கு போடுவது நல்லது.
ஓட்ஸ் மற்றும் கேரட் மாஸ்க்
3 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடியுடன், 1 டேபிள் ஸ்பூன் கேரட் ஜூஸ், 1 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் சரும துளைகளில் உள்ள அழுக்குகள் நீக்கப்பட்டு, சருமத்தின் நிறமும் அதிகரித்து காணப்படும்.
தக்காளி மாஸ்க்
அரைத்த தக்காளி ஒன்று, 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 2 டேபிள் ஸ்பூன் க்ளே சேர்த்து ஒன்றாக கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், முகப்பருக்கள் நீங்குவதுடன், சருமத்தில் உள்ள கருமையும் நீங்கும்.