Just In
- 30 min ago இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கனுமா?.. இதை சாப்பிடுங்கள்..!
- 1 hr ago உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- 1 hr ago எச்சரிக்கை! எக்காரணம் கொண்டும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீங்க.. ரொம்ப அவதிப்படுவீங்க..
- 1 hr ago புற்றுநோய், இதய நோய் அபாயத்தை குறக்கனுமா? இதோ இந்த பழங்களை சாப்பிடுங்கள்..!
Don't Miss
- Movies போடு வெடிய.. ராமராஜனின் சாமானியன் ரிலீஸ் எப்போ தெரியுமா?.. வெளியானது அறிவிப்பு
- Finance கிரெடிட் கார்டு: கரெக்டா யூஸ் பண்ணா.. இதைவிட பெஸ்ட் எதுவும் கிடையாது.. நோட் பண்ணுங்கப்பா..!
- News விடாமல் விரட்டும் எல்நினோ தாக்குதல்.. சென்னையில் மழை வருமா? அப்டேட் வந்தாச்சு
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Sports ஒதுக்கி வைக்கப்பட்டாரா? ஐபிஎல் தொடரின் நம்பர் 1 பவுலருக்கு இந்திய அணியில் இடமில்லை.. காரணம் என்ன?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Automobiles இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணிட்டு போகலாம்.. நிறைய வழிகளில் யூஸ் பண்ண
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
முகத்தில் உள்ள சுருக்கத்தைப் போக்க சில இயற்கை வழிகள்!!!
வயதாகிவிட்டால் தான் சருமமானது சுருக்கத்துடன் காணப்படும். ஆனால் தற்போது 20 வயதிலேயே சருமம் சுருக்கமடைந்து முதுமைத் தோற்றத்தைத் தருகிறது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், சரியான சரும பராமரிப்பு இல்லாதது, முகத்தை அழுத்தியவாறு தூங்குவது, புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்றவைகள் முக்கியமானவையாகும்.
மேலும் சருமத்தை அதிக அளவில் வறட்சி அடைய வைத்தாலும், சருமத்தில் சுருக்கங்களானது ஏற்படும். எனவே சருமத்தை வறட்சியடையாமல் பர்த்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல், வாரம் ஒருமுறை அல்லது அன்றாடம் சருமத்தை வீட்டில் இருக்கும் ஒருசில பொருட்கள் கொண்டு பராமரித்து வந்தால், சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்து, சருமம் சுருக்கமடைவதைத் தடுக்கலாம்.
சரி, இப்போது சரும சுருக்கத்தைத் தடுக்கும் அத்தகைய இயற்கை வழிகளைப் பார்ப்போமா!!!
தேங்காய் பால்
தேங்காயை பால் எடுத்து, அதனை தினமும் முகத்
தில் தடவி ஊற வைத்து, கழுவி வந்தால், சருமத்திற்கு தேவையான ஈரப்பசையானது கிடைத்து, முகம் பொலிவோடு பளிச்சென்று இருக்கும்.
அவகேடோ
அவகேடோவில் கொழுப்புக்கள் நிறைந்திருப்பதால், அதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், முகம் புத்துணர்ச்சியுடன் பொலிவோடு காணப்படும். அதற்கு அவகேடோவை மசித்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும்.
எலுமிச்சை
எலுமிச்சை சாற்றினை நீரில் கலந்து, அதனைக் கொண்டு முகத்தை துடைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கிவிடும். குறிப்பாக எலுமிச்சையை முகத்திற்குப் பயன்படுத்திய பின் வெளியே வெயிலில் செல்லக் கூடாது. மேலும் எலுமிச்சை சாற்றினைப் பயன்படுத்திய பின் ஏதேனும் மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்த வேண்டும்.
உருளைக்கிழங்கு
தினமும் உருளைக்கிழங்கைக் கொண்டு சருமத்தை துடைத்து எடுத்து வந்தால், முதுமைத் தோற்றத்தைத் தரும் முகத்தில் உள்ள பிம்பிள் மற்றும் கரும்புள்ளிகளானது நீங்கும்.
கிளிசரின், எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர்
தினமும் இரவில் படுக்கும் முன் கிளிசரின், எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டரை சரிசமமாக எடுத்து கலந்து, முகத்தில் தடவி வர வேண்டும். இப்படி செய்து வந்தால், சருமத்திற்கு தேவையான சத்துக்களானது கிடைத்து சரும சுருக்கங்களானது மறையும்.
அன்னாசி
அன்னாசிப் பழத்தைக் கொண்டு முகத்தை தேய்த்து, 10-15 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், சரும சுருக்கங்களானது நீங்கிவிடும்.