Just In
- 3 hrs ago 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- 3 hrs ago 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
- 4 hrs ago தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- 5 hrs ago வெயில் காலத்தில் உங்க இதயம் பாதுகாப்பாக இருக்கணுமா? அப்ப இந்த 5 விஷயங்களை ஒழுங்கா பண்ணுங்க...!
Don't Miss
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
முகப்பருத் தொல்லையா? வீட்டிலேயே அதற்கு சூப்பர் சிகிச்சை கொடுங்க...
நம்மில் பெரும்பாலானவர்களுக்கு முகத்தில் பருக்களும், தழும்புகளும் தோன்றுவது வழக்கம். அதிலும் நம் நாட்டுக் காலநிலைக்கு இவை மிகவும் சீக்கிரமாகவே முகம் முழுக்க பரவி விடும்.
முகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான ஓட்டைகளில் குண்டக்க மண்டக்க எண்ணெய் தேங்குவதால் தான் இத்தகைய பருக்களும், தழும்புகளும் ஏற்படுகின்றன. முகத்தில் பருக்கள் வெடிப்பதைத் தவிர்ப்பதற்கு எத்தனையோ வழிகள் இருந்தாலும் அத்தனையையும் பின்பற்றுவது சாத்தியமில்லை. ஆனால் இப்பிரச்சனையைக் குறைக்க நிறைய வழிகள் உள்ளன.
முகப்பருக்களை நீக்குவதற்கும், அவற்றை வரவே விடாமல் தடுப்பதற்கும் என்றே மார்க்கெட்டில் நிறைய கிரீம்கள் வலம் வருகின்றன. ஆனால் நம் வீட்டில் சாதாரணமாகக் கிடைக்கும் சில இயற்கையான பொருட்களைக் கொண்டு 'மாஸ்க்' செய்வதன் மூலம் முகப்பருத் தொல்லையை முழுவதுமாக ஒழிக்க முடியும்.
இதோ அத்தகைய சில பொருட்கள்...
சோடா உப்பு
முகப்பருக்களையும், தழும்புகளையும் நீக்குவதற்கு வீட்டிலேயே கிடைக்கும் ஒரு அருமையான மருந்து தான் இந்த சோடா உப்பு. பருக்கள் மற்றும் அவற்றைச் சுற்றிலும் ஏற்படும் அரிப்பையும், எரிச்சலையும் இது போக்கும். ஒரு மடங்கு சோடா உப்பில் இரு மடங்கு மிதமான சுடுநீரைக் கலந்து, அதை முகத்தில் தடவி, 10 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் முகம் பளிச்சிடும். மேலும் அத்துடன் சிறிது தேனையும் கலந்து கொண்டால் முகம் மேலும் பொலிவடையும்.
டீ-ட்ரீ எண்ணெய்
இது ஒரு ஆன்ட்டி-செப்டிக் என்பதால், தோலுக்கு மிகவும் நல்லது. 2 ஸ்பூன் சுத்தமான நீரில் ஒரு ஸ்பூன் சோடா உப்பு, ஒரு ஸ்பூன் தேன், மற்றும் 5 அல்லது 6 சொட்டு டீ-ட்ரீ எண்ணெயைக் கலந்து, அதை தினமும் ஒரு முறை முகத்திற்கு 'மாஸ்க்' போட்டால் பருக்கள் ஓடியே போய்விடும்.
கொத்தமல்லி-புதினா ஜூஸ்
கேட்கும் போதே குளுகுளுன்னு இருக்கா? ஒரு ஸ்பூன் கொத்தமல்லி அல்லது புதினா சாற்றுடன் சிறிது மஞ்சளையும் கலந்து, தினமும் இரவு உறங்கச் செல்லும் முன் முகத்தில் தடவ வேண்டும். பருக்களை விரட்டுவதில் மஞ்சளுக்குப் பெரும் பங்கு உண்டு.
தேன் & இலவங்கப் பட்டை
இலவங்கப் பட்டை பொடியுடன் தேனை நன்றாகக் கலந்து, அதில் கிடைக்கும் பேஸ்ட்டை இரவு தூங்கச் செல்லும் முன் தடவி, மறுநாள் காலையில் இளஞ்சூடான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.
முட்டைகோஸ் இலை
இந்த முட்டைகோஸ் இலையை நன்றாக மசித்து, பருக்கள் இருக்கும் இடத்தில் நன்றாக அழுத்தித் தேய்க்க வேண்டும். பின்னர் 30 நிமிடங்கள் கழித்து முகத்தை அலசிக் கழுவ வேண்டும். சில நாட்களிலேயே நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
உப்பு, எலுமிச்சைச் சாறு
முதலில் எலுமிச்சையை முகத்தில் தடவினால் சருமம் வறட்சியடையும். ஒருவேளை இன்னும் சருமம் வறட்சியடைய வேண்டுமானால், பின்னர் 2 ஸ்பூன் எலுமிச்சைச் சாற்றுடன் அரை ஸ்பூன் உப்பைக் கலந்து, முகத்தில் நன்றாக அழுத்தித் தேய்க்க வேண்டும். அப்போது முகத்தில் வெயில் படாதபடியும் பார்த்துக் கொள்ள வேண்டும். 20 அல்லது 30 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும்.