Just In
- 14 min ago வெயில் காலத்தில் உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்க தினமும் எத்தனை கிளாஸ் தண்ணீர் குடிக்கணும் தெரியுமா?
- 1 hr ago 1 கப் பச்சரிசி மாவு வெச்சு.. இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ஒரு வாரத்துக்கு ஸ்நாக்ஸ் பிரச்சனையே வராது..
- 2 hrs ago கர்ப்ப காலத்தில் பதட்டப்படும் பெண்களுக்கான டிப்ஸ்..!
- 2 hrs ago இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
Don't Miss
- Automobiles விமானம் தரையிறங்கும் முன் எரிபொருளை விமானிகள் வேண்டுமென்றே திறந்துவிடுவார்கள்.. நாடுவானில் ஏன் இத செய்யுறாங்க?
- Movies மீண்டும் தள்ளிப்போன அரண்மனை 4.. விஷாலின் அந்த குற்றச்சாட்டு தான் காரணமா?.. இப்படி ஆகிடுச்சே!
- Technology ஏப்ரல் 24 உறுதி.. ரூ.12000 போதும்.. 45W சார்ஜிங்.. 256ஜிபி மெமரி.. Flat டிஸ்பிளே.. எந்த போன்?
- Sports ஹர்திக் பாண்டியா கதையை முடிக்கப் போகும் தோனி - ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் என்ன நடக்கிறது?
- News இந்த கருப்பு வெள்ளை படத்தில் யானை எங்க இருக்குனு 5 செகன்டுல கண்டுபிடியுங்க! ஈஸிதான்! ஆனாலும் கஷ்டம்
- Finance விப்ரோ: அசிம் பிரேம்ஜி, ரிஷாத் பிரேம்ஜி-க்கு மீண்டும் முக்கிய பதவி.. அடுத்த 5 வருடத்திற்கு அசைக்க முடியாது.
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அழகான முகம் வேண்டுமா? பூசணிக்காய் ஃபேஸ் பேக் போடுங்க...
உடல் அழகைப் பராமரிப்பதற்கு நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகள் உதவியான உள்ளன. சருமம் முதல் முடி வரை, அனைத்தையும் பராமரிப்பதற்கு, பழங்கள் மற்றும் காய்கறிகளில் பப்பாளி, மாம்பழம், ஸ்ட்ராபெர்ரி, அவகேடோ, கேரட் மற்றும் பலவற்றை பயன்படுத்தியிருப்போம். ஆனால் காய்கறிகளில் ஒன்றான பூசணிக்காயை வைத்து அழகைப் பராமரிக்கலாம் என்பது பற்றி தெரியுமா?
ஆம், உண்மையில் சமையலில் பயன்படும் பூசணிக்காயை வைத்து சருமத்தை அழகாக்க முடியும். ஏனெனில் இதில் வைட்டமின்களான ஏ, சி, ஈ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் எண்ணற்ற அளவில் நிறைந்துள்ளன. அதிலும் இதில் உள்ள ஆல்பா மற்றும் பீட்டா கரோட்டீன், ரெட்டினோயிக் ஆசிட் போன்றவை, சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கவும், பழுப்பு நிற சருமத்தை பொலிவாக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இதனை முடிக்கு பயன்படுத்தினால், அதில் உள்ள பொட்டாசியம் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும்.
சரி, இப்போது இந்த பூசணிக்காயை வைத்து எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் போடலாம் என்றும், எந்த பொருளுடன் சேர்த்து ஃபேஸ் பேக் போடலாம் என்றும் பார்க்கலாமா!!!
பூசணிக்காய் கூழ்
பூசணிக்காயின் கூழை எடுத்து, தினமும் 10 நிமிடம் முகத்திற்கு தேய்த்து ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் பொலிவாக இருக்கும்.
பூசணிக்காய் மற்றும் முட்டை
பூசணிக்காயின் கூழை, முட்டையின் வெள்ளைக்கருவுடன் சேர்த்து கலந்து, அத்துடன் சிறிது பால் மற்றும் தேன் சேர்த்து நன்கு கலந்து கொண்டு, அந்த பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவினால், முகத்தில் உள்ள பருக்கள் நீங்கி, முகம் அழகாகக் காணப்படும்.
பூசணிக்காய் மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர்
எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு இந்த முறை சரியானதாக இருக்கும். அதற்கு பூசணிக்காயை நன்கு மசித்து, அதில் தேன் மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.
பூசணிக்காய், பால் மற்றும் சர்க்கரை
முகம் கருப்பாக காணப்பட்டால், அதனை போக்குவதற்கு, பூசணிக்காய் கூழுடன், சிறிது சர்க்கரை மற்றும் பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, 4-5 நிமிடம் ஸ்கரப் செய்து, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின்னர் குளிர்ந்த நீரில் கழுவினால், முகத்தில் உள்ள கருமை நிறம் மங்குவதோடு, பருக்கள் நீங்கி, கரும்புள்ளிகளும் மறைந்துவிடும்.
பூசணிக்காய் மற்றும் கடலை மாவு
இந்த முறையில் ஃபேஸ் பேக்குடன், ஸ்கரப்பும் உள்ளது. அதற்கு மசித்த பூசணிக்காயில், கடலை மாவை சேர்த்து, சிறிது பால் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் அனைத்து சருமத்தினருக்கும் நல்ல பலனைத் தரும். அதிலும் இதனை வாரத்திற்கு 2-3 முறை செய்ய வேண்டும்.
பூசணிக்காய் மற்றும் தயிர்
பூசணிக்காய் கூழுடன், தயிர், எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, இறுதியில் குளிர்ச்சியான நீரில் கழுவிட வேண்டும்.
பூசணிக்காய் மற்றும் பாதாம்
இந்த ஃபேஸ் பேக், பழங்களைக் கொண்டு ஃபேஷியல் போட்டது போன்ற தீர்வைத் தரும். அதற்கு பூசணிக்காய் கூழை, பாதாம் பொடியுடன் சேர்த்து, தேன் ஊற்றி கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, காய வைத்து, நீரில் கழுவ வேண்டும்.
பூசணிக்காய் மற்றும் சந்தனப் பொடி
முகப்பருவில் இருந்து விடுபட வேண்டுமெனில், இந்த முறையை பின்பற்றுங்கள். அதுவும் சந்தனப் பொடியை, பூசணிக்காய் கூழுடன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். வேண்டுமெனில் அத்துடன் சிறிது தேன் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் முகப்பருக்கள் முற்றிலும் நீங்கிவிடும்.