Just In
- 1 hr ago தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- 4 hrs ago Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- 9 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- 10 hrs ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
Don't Miss
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- News ஸ்டாலின் கேட்ட கேள்வி! மேஜையில் இருந்த உளவுத்துறை ரிப்போர்ட! 40ல் வெற்றி உறுதி.. ஆனா.. ஒரு சிக்கலாமே
- Movies டெய்லர் ஸ்விஃப்டுடன் கச்சேரி நடத்தப் போகிறாரா ஏ.ஆர். ரஹ்மான்?.. அந்த விருது வேற கிடைச்சிருக்கே!
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
முகப்பரு அழகை கெடுக்குதா? ஈஸியா வீட்டிலேயே போக்கலாம்!!!
முகத்தின் அழகை முகப்பருக்கள், கரும்புள்ளிகள், வெள்ளைப் புள்ளிகள் என்று பல உள்ளன. இவை அனைத்தும் வருவதற்கு காரணம் நமது செயல்களே ஆகும். எப்படியெனில் நாம் அழகாக இருக்க வேண்டுமென்று, கடைகளில் விற்கும் கண்ட கண்ட க்ரீம்களை முகத்திற்கு பயன்படுத்திவிடுகிறோம். க்ரீம்களால் எப்படி ஏற்படும் என்று கேட்கலாம். ஆனால் உண்மையில் அந்த க்ரீம்களும் பருக்கள் உண்டாவதற்கு ஒரு காரணம். ஏனெனில் அந்த க்ரீம்களில் கெமிக்கல் பல கலந்திருக்கும். இதனால் அந்த கெமிக்கல்கள் சருமத்தின் செல்களை பாதித்துவிடும்.
குறிப்பாக இந்த பிரச்சனை இளம் வயதுள்ளோருக்கு தான் ஏற்படும். அது ஆண்களானாலும் சரி, பெண்களானாலும் சரி, இருவருமே இந்த பிரச்சனைக்கு ஆளாவார்கள். இதற்கு ஹார்மோன்களின் மாறுபாடும் ஒருவிதக் காரணம். எனவே அவ்வாறு முகத்தின் அழகைக் கெடுக்கும் வகையில் பிம்பிள் வந்தால், அப்போது அதனைப் போக்க வீட்டில் எளிதில் கிடைக்கும் பொருட்களை வைத்தே நீக்கலாம். இப்போது அது என்ன பொருட்கள், எவ்வாறு பயன்படுத்த வேண்டுமென்று பார்ப்போமா!!!
ஆப்பிள்
இந்த முறையில் ஆப்பிளை துருவிக் கொள்ள வேண்டும். பின் ஒரு டேபிள் ஸ்பூன் துருவிய ஆப்பிள் மற்றும் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
மஞ்சள் தூள்
மஞ்சள் தூளுடன் சிறிது வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து முகத்தில் பிம்பிள் உள்ள இடங்களில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால், பருக்கள் போவதோடு, அதில் உள்ள கிருமிகளும் அழிந்துவிடும்.
பூசணிக்காய்
பூசணிக்காயை நன்கு வேக வைத்து, பின் குளிர்ந்ததும், அதில் 12 பாதாமை அரைத்துப் போட்டு, சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, 5 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால், முகம் நன்கு பொலிவோடு, பருக்கள் இல்லாமல் இருக்கும்.
பப்பாளி
பப்பாளியின் சாற்றை முகத்தில் தினமும் தடவி, காய வைத்து கழுவி வந்தால், பிம்பிளைத் தடுக்கலாம்.
புதினா
புதினாவை அரைத்து, அதன் சாற்றை வடித்து, முகத்தில் தடவி, ஊற வைத்து, கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் தொடர்ந்து செய்து வந்தால், முகம் புத்துணர்ச்சியுடன், அழகாகக் காணப்படும்.
தேன்
தேனை நேரடியாக முகத்தில் தடவினாலும், பருக்களை குறைக்க முடியும். இதனால் மருத்துவ குணம் வாய்ந்த தேன், சருமத்தில் இருக்கும் பாக்டீரியாக்களை தடுத்து, சருமத்தை பாதுகாக்கும்.
வேப்பிலை
வேப்பிலையின் இலையை அரைத்து, அதினை முகத்தில் தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால், அதில் உள்ள காயங்களை குணப்படுத்தும் தன்மையானது, சருமத்தில் ஏற்படும் இதர பிரச்சனைகளையும் தடுத்துவிடும்.