Just In
- 55 min ago தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- 4 hrs ago Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- 9 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 12 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
Don't Miss
- Movies கமலுக்கான ஆதரவா?.. திடீரென உத்தம வில்லன் பட மேக்கிங் வீடியோவை வெளியிட்ட பூஜா குமார்!
- News ஓட்டு போட சொந்த ஊர் போனவங்களுக்கு வந்த குட்நியூஸ்.. சென்னைக்கு இன்று முன்பதிவில்லா ஸ்பெஷல் ரயில்
- Finance சென்னை லயோலா-வில் படித்த அஜித்.. பெங்களூரிலேயே காஸ்ட்லியான இடத்தை வாங்கியிருக்கிறார்.. யார் இவர்..?
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கூந்தல் நீளமாக இல்லைன்னு வருத்தமா? உங்களுக்கு உதவும் 5 ஆயுர்வேத குறிப்புகள்!!
நீளமான கூந்தல் பெற இங்கே ஆயுர்வேத குறிப்புகள் கொடுக்கப்படுள்ளன. இவை கூந்தல் வளர்ச்சியை தூண்டி, ஆரோக்கியமான கூந்தல் பெற உதவுகின்றன்.
சிலருக்கு கூந்தல் கட் செய்தாலும் வேகமாக வளரும். ஆனால் குறிப்பிட அளவு வந்த பிறகு நின்று விடும். அரை அடிக்கு மேல் தாண்டாது. நீண்ட முடி இல்லையென்று வருத்தம் இருந்திருக்கிற்தா?
இந்த பாட்டி வைத்தியங்களை முயற்சித்துப் பாருங்கள். அனேகம் பேர் இதனை முயற்சித்திருக்க மாட்டீர்கள். தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
கசகசா, அதிமதுரம் :
கசகசாவும், அதிமதுரமும் சம அளவு எடுத்துப் பொடி செய்து பசும் பாலில் குழைத்துத் தலையில் தடவி ஊறிய பின் குளித்தால் நரை முடி மறையும். கூந்தலும் வளரும்.
சீகைக்காய் மற்றும் மோர் :
தலைக்கு சீயக்காய்த்தூள் தேய்த்துக்கொள்ளும் போது, சீயக்காய்த் தூளுடன் தண்ணீருக்குப் பதில் மோர் விட்டுக் கரைத்து தேய்த்துக் குளித்தால், தலை முடியில் உள்ள அழுக்கு சுத்தமாக நீங்கி விடும். சீயக்காயும் குறைந்த அளவே போதும்.
வடித்த கஞ்சி :
சாதம் வடித்த கஞ்சியில் வெந்தயப் பொடி, பயத்த மாவு கலந்து ஊற வைத்து தேய்த்துக்கொள்ளலாம். இதனால் கூந்தல் பளபளப்பாக இருக்கும்.
மருதாணி, தேங்காய்பால் :
ஒரு கிண்ணத்தில் மருதாணிப் பொடி, தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெயும் சேர்த்துக் குழைத்துத் தலையில் மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்துத் தலைக்குக் குளித்தால் கூந்தல் வறட்சி, கரடு முரடான தன்மை ஆகியவை மறைந்து மிருதுவாகும்.
காய்கறி வைத்தியம் :
வெங்காயத்தையும், முட்டைக் கோசையும் பொடிப் பொடியாக நறுக்கி (ஒரு கப் அளவு) அதை இரவு முழுவதும் ஒரு செப்புப் பாத்திரத்தில் போட்டு வைக்கவும். மறு நாள் அவற்றை பிழிந்து கிடைக்கும் சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் மசாஜ் செய்யுங்கள். அரை மணி நேரம் கழித்து தலைக்கு குளிக்கவும். இப்படி செய்தால் கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும்.