Just In
- 27 min ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 3 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 4 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- 6 hrs ago பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
Don't Miss
- News 664 மனு நிராகரிப்பு! தமிழக லோக்சபா தேர்தலில் 1085 வேட்புமனு ஏற்பு! எந்த தொகுதியில் அதிகம் தெரியுமா
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
முடி உதிர்வதை கட்டுப்படுத்தும் அரிய மூலிகைகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாமா?
முடி உதிர்வதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இது அழகு மட்டுமன்றி ஆரோக்கியம் சார்ந்த விஷயமாகவும் கருதப்படுகிறது. உடலில் பாதிப்புள்ளாகும்போதும் முடி உதிரும், சுற்றுப் புற சூழ் நிலைகளாலும் முடி உதிரும்.
முடி உதிர்தல் பருவ நிலை மாறுபாட்டால் சற்று கூடுதலாகவே உதிரும். இதற்காக பயப்பட தேவையில்லை. போதுமான அளவு பராமரிப்பு கொடுத்தால், அழகிய கூந்தல் உங்களுக்கு சொந்தமாகும்.
கூந்தலை வளரச் செய்வதில் மூலிகைகளின் பங்கு அற்புதமானது. அவை அரிதாக கிடைக்கக் கூடியவை. ஆனால் முடி வளர்ச்சியை அபாரமாக தூண்டும். அவ்வகையான மிக முக்கியமான மூலிகைள் எவ்வாறு முடி உதிர்தலை கட்டுப்படுத்தி, அடர்த்தியாக வளரச் செய்கிறது என பார்க்கலாம்.
ஜென்செங்க் :
இது ஒரு வகையான மருந்து வேர் இஞ்சி வகையை சார்ந்தது. ஆயுர்வேத கடைகளில் கிடைக்கும். இது தலையிலுள்ள வேர்கால்களில் ரத்த ஓட்டத்தை அதிகபடுத்துகிறது. ஏதாவது ஒரு எண்ணெயில் இந்த வேரை ஊற வைத்து, தலையில் தேய்த்தால், முடி அற்புதமாக வளரும்.
ரோஸ்மெரி :
ரோஸ்மெரி சக்தி வாய்ந்த மூலிகை. இது முடி உதிர்வதை கட்டுப்படுத்துவதோடு, புதிய முடி வள்ரவும் தூண்டுகிறது. ரோஸ்மெரியில் தேநீரில் தயாரித்து குடிப்பதால், நச்சுகள் வெளியேறி, முடி வளரச் செய்யும்.
பிருங்கராஜ் :
தொடர்ந்து பிருங்க ராஜ் உபயோகப்படுத்தினால் முடி உதிர்வதை முழுவதுமாக நிறுத்திவிடும். நரை முடியை தடுக்கும். உங்கள் வேர்கால்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.
ஜடாமம்ஸி :
இதுவும் மிகவும் அரிதாக கிடைக்க க் கூடிய மூலிகை. இதனை எண்ணெயில் கலந்து, உபயோகப்படுத்தும்போது, முடி உதிர்வதை தடுத்து, நன்றாக வளரச் செய்யும். நரை முடி ஏற்படாது.
வேப்பிலை :
வேப்பிலை, பொடுகு, அரிப்பு, சரும பிரச்சனைகளை அடியோடு நிறுத்திவிடும். முடி வளர்ச்சியை தூண்டும். கிருமிகளின் தாக்கத்தை அழிக்கும். இதனால் கூந்தல் போஷாக்கோடு வளரத்தொடங்கும்.
வேப்பிலையை காய வைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். இதனை தேவைப்படும்போது, நீரில் கலந்து தலையின் வேர்ப்பகுதிகளில் தடவி, 20 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். வாரம் இரு முறை செய்தால், நன்றாக முடி வளரும்.
செம்பருத்தி :
செம்பருத்தியின் இலை, பூ எல்லாமே கூந்தலின் வளர்ச்சியை தூண்டவல்லது. முடியை அடர்த்தியாக வளரச் செய்வதோடு மட்டுமல்லாமல், கூந்தலை பளபளப்பாகவும், மிருதுவாகவும் வைத்திருக்கும்.