Just In
- 1 hr ago 18 ஆண்டுகளுக்கு பின் நிகழும் ராகு சூரிய சுக்கிர சேர்க்கை: மார்ச் 31 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்..
- 3 hrs ago இட்லி, தோசைக்கு ஒருமுறை இப்படி தக்காளியை குருமாவை செஞ்சு பாருங்க.. அடிக்கடி செய்வீங்க..
- 11 hrs ago கும்ப ராசியில் உதயமாகும் சனி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படப்போகுது..
- 13 hrs ago உங்களுக்கு கொலஸ்ட்ரால் இருக்கா? மறந்தும் இந்த சப்ளிமென்டுகளை எடுக்காதீங்க.. அப்புறம் கஷ்டப்படுவீங்க..
Don't Miss
- News புதுக்கோட்டையில் ஞானசேகரன் வீட்டில் ஒரே அதிசயம்.. எல்லாரும் திரண்டு வந்துட்டாங்க.. ஆச்சரிய "குழந்தை"
- Finance கடனில் மூழ்கியுள்ள பியூச்சர் குரூப் கிஷோர் பியானி.. மும்பையில் மால் வாங்க போகிறாராம்..!!
- Sports சர்ஃபராஸ் கான், ஜுரேலுக்கு அடித்த ஜாக்பாட்.. ஆனால் ரிஷப் பண்ட்டுக்கு.. பிசிசிஐ வைத்த ட்விஸ்ட்
- Movies ராஜமெளலி படத்துல மகேஷ் பாபு இந்த கெட்டப்புல நடிக்கிறாரா?.. வெளியான வெறித்தனமான ஸ்டில்!
- Automobiles கேரளாவில் தவெக தலைவர் விஜய்யை பார்க்க இவ்வளவு கூட்டமா? கேரளாவுல நின்னா வெற்றி கன்ஃபார்ம்!
- Technology வாரித்தூக்குது ஆர்டர்.. ரூ.11,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
உங்கள் கால்களில் துர்நாற்றம் வீசுகிறதா? அதைத் தடுக்க இதோ சில வழிகள்!
தற்போது வெயில் கொளுத்துவதால், ஏராளமான சரும பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அதில் ஒன்று தான் வியர்வை. என்ன தான் வியர்வை ஒரு மணமற்ற திரவமாக இருந்தாலும், இது சருமத்தில் உள்ள பாக்டீரியாக்களுடன் சேர்ந்து துர்நாற்றத்தை உண்டாக்குகின்றன.
அதிலும் கால்களில் ஷூ போடுபவர்களின் பாதங்களை எடுத்துக் கொண்டால், எலி இறந்து போன நாற்றம் வீசும். இதனைத் தடுக்க தினமும் ஒருசில செயல்களை மாலையில் வீடு வந்ததும் செய்தால் போதும்.
இங்கு பாதங்களில் வியர்வையினால் வீசும் துர்நாற்றத்தைத் தடுக்க சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!!!
பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை
1/2 வாளி நீரில் 1/4 கப் பேக்கிங் சோடாவை போட்டு கலந்து, அதில் ஒரு எலுமிச்சையை பிழிந்து, அக்கலவையில் பாதங்களை 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், பாதங்களில் உள்ள கிருமிகள் அழிக்கப்பட்டு, துர்நாற்றம் வீசுவது தடுக்கப்படும்.
வினிகர்
வினிகரில் உள்ள அசிட்டிக் அமிலம், பாக்டீரியாக்களை அழித்து, துர்நாற்றத்தைத் தடுக்கும். அதற்கு 1/2 கப் வினிகரை 8 கப் வெதுவெதுப்பான நீரில் கலந்து, பாதங்களை அந்நீரில் 20-25 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.
லாவெண்டர் எண்ணெய்
1/2 வாளி நீரில் சில துளிகளில் லாவெண்டர் எண்ணெயை சேர்த்து கலந்து, 15-20 நிமிடம் கால்களை அதில் ஊற வைத்து, பின் தேய்த்து கழுவ, பாதங்களில் இருந்து வீசும் துர்நாற்றம் தடுக்கப்படும்.
படிகாரம்
1/2 வாளி வெதுவெதுப்பான நீரில் சிறிது படிகாரத்தைப் போட்டு, அந்நீரில் பாதங்களை 15-20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்வதன் மூலம் கால்களில் இருந்து வீசும் துர்நாற்றம் நீங்கும்.
ஐசோப்ரோபைல் ஆல்கஹால் மற்றும் சர்க்கரை
இது மிகவும் பிரபலமான ஓர் முறை. அது 1/4 கப் ஐசோப்ரோபைல் ஆல்கஹாலில், 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து, அக்கலவையைக் கொண்டு கால்களை 10-15 நிமிடம் ஸ்கரப் செய்து கழுவ வேண்டும். இப்படி தினமும் ஒருமுறை செய்து வர, பாத துர்நாற்றம் தடுக்கப்படும்.
கல் உப்பு மற்றும் தண்ணீர்
1 கப் கல் உப்பை 10-12 கப் நீரில் போட்டு, அந்நீரில் பாதங்களை 20-25 நிமிடம் ஊற வைத்து, பின் தேய்த்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்தால், கால்களில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறுவதோடு, துர்நாற்றமும் தடுக்கப்படும்.
ஓட்ஸ் ஸ்கரப்
2 டீஸ்பூன் ஓட்ஸை 1 கப் வெதுவெதுப்பான நீர் சேர்த்து கலந்து, பாதங்களை 15-20 நிமிடம் ஸ்கரப் செய்து, பின் கழுவ, பாதங்கள் சுத்தமாகி, துர்நாற்றம் வீசுவதும் தடுக்கப்படும்.