Just In
- 7 min ago 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
- 52 min ago தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- 1 hr ago வெயில் காலத்தில் உங்க இதயம் பாதுகாப்பாக இருக்கணுமா? அப்ப இந்த 5 விஷயங்களை ஒழுங்கா பண்ணுங்க...!
- 1 hr ago இனிமே மாம்பழ தோலை தூக்கி எறியாம.. இப்படி டீ செஞ்சு குடிங்க.. இருமடங்கு நன்மை கிடைக்கும்...
Don't Miss
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
உடனடியா முகம் பளிச்சிட வேண்டுமா? இந்த சித்த மருத்துவ குறிப்பை ட்ரை பண்ணுங்க!!
இயற்கை முறையில் உங்களை பராமரிக்கும்போது எந்த வித பக்க விளைவில்லாமல் 100 சதவீதம் பலன் கிடைக்கும். கெமிக்கல் கலந்த க்ரீம்களை தவிர்த்து சித்த மருத்துவ அழகுக் குறிப்புகளை பின்பற்றுங்கள்.
சித்த மருத்துவம் விலை மதிப்பில்லாதது. இது எந்த வித செயற்கை காரணிகள் இல்லாமல் உடல் உறுப்புகளை இயற்கையாக மேம்படுத்தும்.
ஆரோக்கியம் மட்டுமல்லாது அழகையும் தருகிறது. அப்படி இயற்கை வழியில் உங்கள் உச்சி முதல் உள்ளங்கால் வரை எப்படி அழகு படுத்தலாம் என்பதுதான் இங்கே சொல்லப்பட்டுள்ளது.
முகம் உடனடியாக பளிச்சிட:
ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவவேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.
தேவையற்ற முடியை அகற்ற :
முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும்இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.
கூந்தல் பிசுபிசுப்பை நீக்க :
கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், முட்டையின் வெள்ளைக் கருவில் கொஞ்சம் சர்க்கரையை கலந்துதலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடிஅழகு பெறும்.
கூந்தல் பளபளப்பாக :
தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்துக்குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.
வெயிலில் கறுத்து போகாமலிருக்க :
வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக்கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம்குரு வராமல், வெயிலில் கறுத்துப் போகாமல் இருக்கும்.
கண்கள் பிரகாசமாக இருக்க :
இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள்பிரகாசமாக இருக்கும்.
மூட்டு கறுப்பை போக்க :
கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றைதேய்த்து வந்தால் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும்.