Just In
- 19 min ago ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- 3 hrs ago Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- 9 hrs ago வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 11 hrs ago மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
Don't Miss
- News சர்ச்சை கருத்து: பிரதமர் மோடி இப்படி பேசுறதுக்கு காரணமே இதுதான்.. போட்டு தாக்கிய நடிகர் பிரகாஷ் ராஜ்
- Movies படு மோசமான படுக்கையறை காட்சி.. ரஜினியின் ரீல் மகளை திட்டிதீர்க்கும் பேன்ஸ்!
- Finance இன்போசிஸ் எடுத்த முக்கிய முடிவு… கல்லூரி மாணவர்கள் ஷாக்.
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தோல் பளபளக்க... முடி மினுமினுக்க... சாத்துக்குடி யூஸ் பண்ணுங்க...
சிலருக்குக் கண்களில் கருவளையம், உதடுகள் வறண்டு கருப்பாக மாறுவது ஆகியவை சகஜம் தான். இதற்காக அவர்கள் பல க்ரீம்களையும், ஃபேஸ் வாஷ்களையும் தேடி ஓடுவார்கள். இன்னும் சிலர், பியூட்டி பார்லருக்குப் படை எடுப்பார்கள்.
அதெல்லாம் எதுவும் தேவையில்லை. ஒரே ஒரு சாத்துக்குடிப் பழம் போதும்! அதில் உள்ள சிட்ரிக் அமிலம், கருவளையத்தையும், வறட்சிகளையும் போக்குவதோடு மட்டுமல்லாமல், முகத்தைப் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. மேலும் சாத்துக்குடியானது ஒருசில முடி பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வை வழங்குகிறது.
இப்போது அதிக செலவே இல்லாமல், வெறும் சாத்துக்குடிப் பழத்தை வைத்துக் கொண்டே எப்படி இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும் என்பது பற்றிப் பார்ப்போமா...!
கரும்புள்ளிகளை நீக்கும்
முகத்தை சோப்பு பயன்படுத்தி நன்றாகக் கழுவித் துடைத்து, பின் சாத்துக்குடிப் பழத்தை இரண்டாக வெட்டி, அதன் ஒரு பாதியை முகம் முழுவதும் சுமார் 12 நிமிடங்கள் வரை தேய்க்கவும். பின்னர் ஒரு உலர்ந்த துணியால் முகத்தை சுத்தமாகத் துடைத்து, நீரில் நன்றாகக் கழுவவும். இதனால் அதில் உள்ள சிட்ரிக் ஆசிட்டானது, முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை எளிதில் வெளியேற்றிவிடும்.
பருக்களைப் போக்கும்
சாத்துக்குடிப் பழத்தின் தோலை நன்றாக அரைத்து, அதை முகத்தில் தடவினால் பருக்கள் மறைந்து போகும்.
கருப்பு நிற உதடுகளுக்கு...
சாத்துக்குடி சாற்றை தினமும் 3-4 முறை உதடுகளில் தடவி வந்தால், உதடுகளில் உள்ள கருப்பு மறைவதுடன், உதடு வெடிப்புகளும் நீங்கும்.
பொடுகுத் தொல்லைக்கு சிறந்த தீர்வு
சாத்துக்குடி பழத்தின் சாற்றை தலையில் அடிக்கடி தடவி வந்தால், பொடுகு நீங்குவதுடன், முடிகளும் பளபளப்பாகும்.
கருமையைப் போக்கும்
முகத்தில் மட்டுமல்லாமல், கழுத்து, அக்குள், முழங்கை மற்றும் முழங்கால் ஆகிய பகுதிகளிலும் சாத்துக்குடியை நன்றாகத் தேய்த்தால், அந்த இடத்தில் உள்ள கருமையானது நீங்கி பளபளப்பாக மாறும்.