அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதற்காக எத்தனையோ பராமரிப்புக்களை முகத்திற்கு செய்கிறோம். ஆனால் அவ்வாறு உடலில் முகம் மட்டும் நன்கு அழகாக இருந்தால் போதுமா என்ன? இல்லை அல்லவா, எனவே எப்படி முகத்திற்கு அத்தனை பராமரிப்புக்களை மேற்கொள்கிறோமோ, அதைப் போல் அவற்றில் பாதியாவது, உடலின் மற்ற பாகங்களுக்கும் கொடுக்க வேண்டும்.
முக்கியமாக கை மற்றும் கால்களுக்கு கொடுக்க வேண்டும். ஏனெனில் எப்படி முகம் மற்றவர்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ, அதேப் போல் மற்றவர்களின் கண்களுக்குப் படும்படியான கை மற்றும் கால்களையும் நன்கு அழகாக வைத்துக் கொள்ளவும் வேண்டும்.
அவ்வாறு சரியாக கவனிக்காவிட்டால், அது பின் சருமத்தில் மற்ற பிரச்சனைகளை ஏற்படுத்தி, உடலின் அழகையே கெடுத்துவிடும். சரி, இப்போது உடலில் உள்ள கை மற்றும் கால்களை எப்படி, எதை வைத்து பராமரிக்க வேண்டும் என்று பார்ப்போமா!!!
ஆயில் மசாஜ்
கை மற்றும் கால்களில் உள்ள நகங்கள் நன்கு அழகாக பொலிவோடு மின்னுவதற்கு, தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெயை காட்டனில் நனைத்து, தினமும் இரவில் படுக்கும் போது நகங்களில் தேய்த்து, சிறிது நேரம் மசாஜ் செய்தால், நகங்களில் போதிய எண்ணெய் பசையானது கிடைத்து, நகங்கள் வலிமையோடு இருக்கும். வேண்டுமெனில் ஆலிவ் ஆயிலையும் பயன்படுத்தலாம்.


































