Just In
- 3 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 5 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 6 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 7 hrs ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
உடலில் எண்ணெய் பசை எதுக்கு அதிகமா இருக்குன்னு தெரியுமா?
உடலில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பதற்கு காரணங்கள்:
* இந்த மாதிரி எண்ணெய் அதிகமாக சுரப்பதற்கு ஹார்மோன்களது மாற்றமும் ஒரு காரணம். அதிலும் ஹார்மோன்களின் மாற்றங்கள் பூப்படையும் போது, மாதவிடாயின் போது மற்றும் கர்ப்பமாக இருக்கும் போது ஏற்படும். அதனால் தான் இளம் பெண்களின் முகங்களில் முகப்பருக்கள், கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகள் போன்றவை ஏற்படுகிறது. ஏனெனில் இவ்வாறு எண்ணெய் அதிகமாக சுரந்தால், அவை சருமத்துளைகளில் அடைப்பை ஏற்படுத்திவிடுகின்றன. அதிலும் மாதவிடாயின் போது ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவாகவும், டெஸ்ட்ரோஜன் அளவு அதிகமாகவும் சுரப்பதால், அவை எண்ணெய் சுரப்பியில், கெட்டியான எண்ணெயை உருவாக்குகின்றன. எனவே தான் முகம், முதுகு, மார்பகம், தோள்பட்டை போன்றவற்றில் பருக்கள் ஏற்படுகின்றன.
* மனஅழுத்தமும் ஒரு வகையான காரணம். இவ்வாறு மனமானது அதிக அழுத்தத்திற்கு உட்படும் போது, ஹார்மோன்கள் மோசமான நிலையில் தூண்டப்படுவதால், அவை சருமத்தில் பருக்கள் அல்லது ஒருவித அழற்சி போன்றவற்றை ஏற்படுத்திவிடும். அதிலும் இந்த அழற்சியானது பொதுவாக மார்பகத்திற்கு மேல், முதுகு, புருவம், மூக்கு, காதுகளுக்கு பின்புறம் போன்ற இடங்களில் ஏற்படும். அதிலும் அழற்சி வரும் இடமானது பார்ப்பதற்கு சிவப்பு நிறத்தில், வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தால் சூழ்ந்திருக்கும். எனவே அதிகமாக டென்சன் அடையாமல் இருந்தால், பருக்கள், அழற்சி போன்றவற்றை தவிர்க்கலாம்.
* ஒருசில சருமத்தை அழகுப்படுத்தப் பயன்படுத்தும் அழகுப் பொருட்களான மாய்ச்சுரைசர் க்ரீம் மற்றும் பல பொருட்கள் கூட, சருமத்தில் அதிகப்படியான எண்ணெயை வெளியேற்றி, முகப்பருக்களை ஏற்படுத்தும். அந்த க்ரீம்கள் சருமத்திற்கு பொலிவைத் தரும் தான், ஆனால் அந்த க்ரீமில் உள்ள கெமிக்கலானது, சருமத்துளைகளில் அடைப்பை ஏற்படுத்தி, அங்கு பாக்டீரியாவை தங்க வைத்துவிடும். பின் என்ன சருமம் தான் அதிகம் பாதிப்படையும். எனவே தான் அதிகம் கெமிக்கல் கலந்து அழகுப் பொருட்களைப் பயன்படுத்தினால், சிலருக்கு முகத்தில் புள்ளிகளான பருக்கள் ஏற்படுகின்றன. அதற்காக அழகுப் பொருட்களையே பயன்படுத்தக்கூடாது என்பதில்லை, எண்ணெய் அதிகம் இல்லாத அழகுப் பொருட்களைப் பயன்படுத்துவது நல்லது.