Just In
- 1 hr ago சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 2 hrs ago இந்த 4 ராசிக்காரங்களோட முதல் எதிரியே அவங்க ஈகோதானாம்... ஈகோவாலேயே நிறைய விஷயங்களை இழந்துருவாங்களாம்!
- 3 hrs ago ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- 6 hrs ago Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
Don't Miss
- News முஸ்லிம்களின் மக்கள் தொகை வளர்ச்சி வீதம் குறைவு! சொல்வது அரசு டேட்டா! ஆனால் மோடி ஏன் அப்படி பேசினார்
- Movies ரஜினிகாந்த்தின் கூலி.. லோகேஷ் கனகராஜுக்கு இவ்வளவு சம்பளமா?.. அய்யோ எங்கேயோ போய்ட்டாரே
- Automobiles வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்.. சான்ஸைமிஸ் பண்ணிடாதீங்க..!
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
உங்க கை அட்டு கருப்பாக இருக்கா? அப்ப இத ட்ரை பண்ணி வெள்ளையாக்குங்க...
உடலிலேயே கைகள் தான் அதிக அளவில் சூரியக்கதிர்களின் தாக்கத்திற்கு உட்படுகின்றன. அப்படி அளவுக்கு அதிகமாக சூரியக்கதிர்களின் தாக்கத்தினால், கைகளானது கருமையடைந்துவிடுகின்றன. மேலும் நம் கைகளைப் பார்த்தால், நமக்கே அடையாளம் தெரியாது. அதுமட்டுமின்றி, முகம் ஒரு நிறத்திலும், கைகள் ஒரு நிறத்திலும் இருக்கும். இத்தகைய கருமையைப் போக்க வேண்டுமானால், கைகளுக்கும் சரியான பராமரிப்பு மிகவும் அவசியமாகிறது.
அதுவும் எப்படி முகத்திற்கு மாஸ்க், ஃபேஷியல், கிளின்சிங் போன்றவற்றை செய்கிறோமோ, அதேப் போன்று கைகளுக்கும் செய்ய வேண்டும். அதுமட்டுமல்லாமல், வெளியே செல்லும் போது சூரியக்கதிர்கள் கைகளில் படாதவாறு கைகளுக்கு பாதுகாப்பு கவசமான சன் ஸ்க்ரீன் லோசனை அணிந்து செல்ல வேண்டும்.
சரி, இப்போது கைகளில் உள்ள கருமையைப் போக்கி, நல்ல வெள்ளையான கைகளைப் பெற என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று கீழே கொடுத்துள்ளோம். படித்து முயற்சி செய்து பாருங்கள்.
பப்பாளி
பப்பாளியில் கிளின்சிங் தன்மை இருப்பதால், இதன் ஒரு துண்டைக் கொண்டு தினமும் கைகளை தேய்த்து, ஊற வைத்து கழுவி வந்தால், கைகளில் உள்ள கருமையானது நீங்கிவிடும்.
பால்
பாலும் சருமத்தில் கருமையைப் போக்க உதவும் ஒரு சிறந்த பொருள். அதற்கு காய்ச்சாத பாலை தினமும் குளிக்கும் முன், தடவி ஊற வைத்து, நீரில் காட்டனை நனைத்து துடைத்துவிட்டு, பின் குளிக்க செல்ல வேண்டும்.
கடலை மாவு
கடலை மாவை பால் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து, அதனை கைகளில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இதனை தினமும் செய்து வந்தால், ஒரே மாதத்தில் நல்ல பலன் கிடைக்கும்.
கற்றாழை
கற்றாழை ஜெல்லில் சிறிது வெள்ளரிக்காய் சாறு அல்லது உருளைக்கிழங்கு சாறு சேர்த்து, கருமையான இடங்களில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள கருமை நீங்கிவிடும். அதுமட்டுமின்றி, இந்த முறையை வெளியே செல்லும் முன்பு செய்துவிட்டு சென்றால், கைகளுக்கு நல்ல பாதுகாப்பு கிடைக்கும்.
எலுமிச்சை சாறு
எலுமிச்சை சாற்றில் ப்ளீச்சிங் தன்மை இருந்தால், அந்த எலுமிச்சை சாற்றில் சிறிது தேன் மற்றும் பால் பவுடர் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனை தினமும் தவறாமல் செய்து வந்தால், கைகள் வெள்ளையாகும்.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தை சிறிது எடுத்து, அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து, கைகளில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின்பு குளிர்ச்சியான நீரில் கழுவினால், அவற்றில் உள்ள ப்ளீச்சிங் தன்மையால் கைகளில் உள்ள கருமை நிறமானது மங்கும்.
குறிப்பு
மேற்கூறியவற்றை தவறாமல் செய்து வந்தால், நிச்சயம் கைகளில் உள்ள கருமை மற்றும் கரும்புள்ளிகளைப் போக்கலாம். அதுமட்டுமின்றி, எப்போது வெளியே செல்வதாக இருந்தாலும், கைகளுக்கு சன் ஸ்க்ரீன் லோசனை தவறாமல் பயன்படுத்துங்கள்.